டாப் நியூஸ்

இவ்வளவு நாள் எங்கப்பா இருந்தீங்க.. எஸ்ஏசி – ஆனந்த்.. விறுவிறுப்படையும் தவெக மாநாடு!

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சிறப்பு தரிசனம் மேற்கொண்டுள்ளார்.

சென்னை: இன்னும் ஒரு படத்தை மட்டுமே கையில் வைத்திருந்தாலும், 250 கோடி ரூபாய் ஊதியம் கேட்டாலும் கொடுக்கத் தயார் என தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்று கொண்டிருப்பதாக சினிமாத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு உச்சத்தில் உள்ள நடிகர் விஜய், இவை அனைத்தையும் விட்டுவிட்டு பொது வாழ்விற்கு ஆயத்தமாகி உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கட்சிக் கொடி, கட்சிப் பாடல் என அனைத்தையும் வெளியிட்டாலும், விஜயின் முதல் அரசியல் மேடையாக அமைய இன்னும் இரண்டே நாட்கள் மட்டுமே உள்ளது.

ஆம், வருகிற 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் சுமார் 2 மணி நேரம் விஜய் உரையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் அடிக்கடி வந்து பார்வையிட்டுச் செல்கிறார்.

அந்த வகையில், இன்று மாநாடு நடைபெறும் இடத்தில் நடைபெறும் பணிகளைப் பார்வையிடுவதற்காக ஆனந்த் வந்தார். அப்போது, “சுமார் 10 ஆயிரம் விஜய் ரசிகர்கள், மாநாட்டின் முன்களப் பணியாளர்களாக பணியாற்ற உள்ளனர். மேலும், 150 மருத்துவர்கள் தயார் நிலையில் எப்போதும் இருப்பர்” எனத் தெரிவித்தார்.

இது ஒருபுறம் இருக்க, விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், சென்னை கொரட்டூரில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு தனது மனைவி ஷோபா சந்திரசேகர் உடன் வந்தார். அங்கு விஜய் ரசிகர்கள், தவெக மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்காக ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கும் மாநாடு சிறப்பாக அமைய வேண்டும். எங்கள் தளபதிக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும். பெரிய நிலைமைக்கு அவர் வர வேண்டும். தமிழ்நாட்டிற்கு பொக்கிஷம் கிடைக்க வேண்டும். இதை வலியுறுத்தி தவெக தொண்டர்கள் நமது சாய்பாபா கோயிலில் அன்னதானம் செய்துள்ளனர்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: தலைவலியாகும் தவெக மாநாடு.. என்னதான் செய்கிறார் விஜய்?

மேலும், இந்த மாநாட்டில் விஜய் ஏற்ற உள்ள நூறடி உயரக் கொடி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதே இடத்தில் பறக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், மணி என்ற விவசாயியிடம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, தவெக மாநாடு நடைபெறும் இடத்தில் கடலுர் எஸ்பி ராஜாராம், விழுப்புரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர குமார் குப்தா, விக்கிரவாண்டி காவல் துணை கண்கானிப்பாளர் நந்தகுமார் உள்ளிட்டோர், நடைபெற உள்ள மாநாட்டுக்கு போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

Hariharasudhan R

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

10 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

11 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

12 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

13 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

13 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

14 hours ago

This website uses cookies.