டாப் நியூஸ்

விஜய் சொன்னது சரிதான்.. ஜெயக்குமார் போடும் கணக்கு!

தமிழக அரசும் பாசிசம் இல்லாமல் பாயாசமா என விஜய் கூறியது சரிதான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117வது பிறந்த நாள் மற்றும் 62வது குரு பூஜையை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தேசியமும், தெய்வீகமும் தனது இரு கண்கள் என வாழ்ந்து மறைந்தவர் முத்துராமலிங்கத் தேவர்.

அவரைப் பொறுத்தவரையில் கல்வியும், வீரமும் அனைவரும் பெற வேண்டும். கல்வி பெறுவதோடு மட்டுமல்லாமல், வீரத்தோடு இருக்க வேண்டும் என்ற வகையில் திண்ணை பிரச்சாரம் மூலம் எடுத்துரைத்தார். இதன் மூலம் சுதந்திரப் போராட்டத்திற்கு இளைஞர்களை அதிகமான அளவுக்கு ஈடுபடுத்தியவர் அவர்.

சென்னையில் மாநகராட்சி விளையாட்டுத் திடல் தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம் விளையாட்டுத் துறைக்கே சாபக்கேடு ஏற்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து ஒடுக்கப்பட்ட மக்கள் விளையாட்டு வீரர்களாக முன்னேறி வருகின்றனர். இந்தச் செயலால், அவர்கள் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மாநகராட்சியின் இந்த செயலின் மூலம் விளையாட்டு வீரர்களின் திறமைகளை மழுங்கடிக்ககூடிய துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் தீபாவளி நெருங்கும்பொழுது, அதற்கு முன்னதாகவே மீனவர்களுக்கு உதவித் தொகை வழங்குவது வழக்கம். ஆனால், திமுக ஆட்சியில் இது வழங்கப்படுவதே இல்லை. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அவருடைய தந்தைக்கு நினைவிடம் கட்ட பணம் இருக்கிறது, பேனா சின்னம் கட்ட பணம் இருக்கிறது, ஆனால் மீனவர்களின் சேமிப்பு பணத்தை உதவித் தொகையாக வழங்க தமிழக அரசுக்கு வழங்க பணம் இல்லையா? இது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்றார்.

இதையும் படிங்க: தேவர் ஜெயந்தி விழாவுக்காக தர்காவில் தொழுகை.. முளைப்பாரிகளை வைத்து இஸ்லாமியர்கள் வழிபாடு!

பின்னர், தவெக மாநாட்டில் விஜய் பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “தவெக மாநாட்டில் விஜய் கூறியது சரி தான். மத்திய அரசு பாசிசத்தை நோக்கிச் செல்லும் போது, மாநில அரசும் பாசிசம் இல்லாமல் பாயாசமா? என விஜய் சரியாகத் தான் கூறியுள்ளார். திமுக அரசை எதிர்ப்பவர்கள் மீது குண்டர் சட்டம் போட்டு, அவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். திமுகவினரால் எதிர்கட்சிகள் ஒடுக்கப்படுகிறது. அப்படியென்றால் இது பாசிசம் இல்லையா?” என கேள்வி எழுப்பினார்.

Hariharasudhan R

Recent Posts

வாடகைக்கு ஆள் பிடித்து திமுக புகழை பாடச் சொன்னால் மட்டும் போதுமா? அண்ணாமலை குற்றச்சாட்டு!

வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…

41 minutes ago

வெற்றிமாறன் கையில் எடுக்கும் புது முயற்சி? இதான் ஃபர்ஸ்ட் டைம்! இது ரொம்ப புதுசா இருக்கே?

வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…

55 minutes ago

Welcome to Malayalam Cinema; சாய் அப்யங்கரை வாழ்த்தி வரவேற்ற லாலேட்டன்! தரமான சம்பவம்?

டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…

2 hours ago

அஜித் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றியுள்ளார் முதல்வர்.. இது அவருடைய பெருந்தன்மை : காங்., தலைவர் பேச்சு!

மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…

3 hours ago

பாபநாசம் படத்தில் ரஜினிகாந்த்? இயக்குனர் எடுத்த முடிவால் ஹீரோவே மாறிய சம்பவம்!

திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…

3 hours ago

அதிமுக உடனான கூட்டணி கதவை சாத்திய விஜய்? செயற்குழுவில் வெளியான அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவும் அதிமுகவும் எதிரெதிர் துருவங்களாக களமிறங்குகின்றன. தற்போது திமுக கூட்டணியில் எவ்வித…

4 hours ago

This website uses cookies.