டாப் நியூஸ்

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி

இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே. AVID படத்தொகுப்பு, Dolby ஆடியோ என பல தொழில்நுட்பங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வாறு இந்திய சினிமாவிற்கு மிகப்பெரிய பங்கை அளித்தவர் கமல்ஹாசன். 

ஆனால் ஒன்றிய அரசால் முன்னெடுக்கப்பட்ட சினிமா விழா ஒன்றில் கமல்ஹாசனை அழைப்பு விடுக்கவில்லை என்று தற்போது ஒரு புகார் எழுந்துள்ளது.

ஒன்றிய அரசின் சினிமா விழா

2025 ஆம் ஆண்டின் Waves சினிமா விழா தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அக்சய் குமார், அல்லு அர்ஜூன், மோகன் லால், ஐஸ்வர்யா ராய், ராஜமௌலி, சிரஞ்சீவி, ஆலியா பட் உட்பட பல முன்னணி சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர். 

ஒன்றிய அரசால் முன்னெடுக்கப்பட்ட இந்த விழாவில் கலந்துகொள்ள கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. இந்த காரணத்தினால்தான் கமல்ஹாசன் இவ்விழாவில் கலந்துகொள்ளவில்லையாம். 

கமல்ஹாசன் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளார் என்ற காரணத்திற்காகவே அவரை அழைக்கவில்லை என்று ரசிகர்கள் பலரும் கொந்தளித்து வருகின்றனர். அதே போல் நடிகர் பிரித்விராஜிற்கும் அழைப்பு வரவில்லை என்று கூறப்படுகிறது. பிரித்விராஜ் இயக்கிய “எம்புரான்” திரைப்படத்திற்கு எதிர்ப்புகள் பலமாய் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.