இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே. AVID படத்தொகுப்பு, Dolby ஆடியோ என பல தொழில்நுட்பங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வாறு இந்திய சினிமாவிற்கு மிகப்பெரிய பங்கை அளித்தவர் கமல்ஹாசன்.
ஆனால் ஒன்றிய அரசால் முன்னெடுக்கப்பட்ட சினிமா விழா ஒன்றில் கமல்ஹாசனை அழைப்பு விடுக்கவில்லை என்று தற்போது ஒரு புகார் எழுந்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் Waves சினிமா விழா தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அக்சய் குமார், அல்லு அர்ஜூன், மோகன் லால், ஐஸ்வர்யா ராய், ராஜமௌலி, சிரஞ்சீவி, ஆலியா பட் உட்பட பல முன்னணி சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
ஒன்றிய அரசால் முன்னெடுக்கப்பட்ட இந்த விழாவில் கலந்துகொள்ள கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. இந்த காரணத்தினால்தான் கமல்ஹாசன் இவ்விழாவில் கலந்துகொள்ளவில்லையாம்.
கமல்ஹாசன் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளார் என்ற காரணத்திற்காகவே அவரை அழைக்கவில்லை என்று ரசிகர்கள் பலரும் கொந்தளித்து வருகின்றனர். அதே போல் நடிகர் பிரித்விராஜிற்கும் அழைப்பு வரவில்லை என்று கூறப்படுகிறது. பிரித்விராஜ் இயக்கிய “எம்புரான்” திரைப்படத்திற்கு எதிர்ப்புகள் பலமாய் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.