திருவண்ணாமலை செய்யாறில் அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு சுமார் 5000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
பல வருடமாக கல்லூரியின் சுற்றுச்சுவர்களும் கழிவறைகளும் பராமரிக்கப்படாமல் இருந்து வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
மேலும் கல்லூரி வளாகத்திலேயே பல இடங்கள் பராமரிப்பு இல்லாமல் ஆங்காங்கே புதர்கள் மண்டி காணப்படுகிறது. இந்த நிலையில் கல்லூரியின் கழிவறையில் பாம்பு குட்டிகள் நெளியும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.
பெண்கள் கழிவறையில் பாம்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அக்கல்லூரியின் முதல்வர் கலைவாணி தெரிவித்துள்ளதோடு கழிவறையை தூய்மைபடுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இருப்பினும் இந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாம்புகள் நெழியும் வீடியோ குறித்து ஜிவி பிரகாஷ்குமார் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது X தளப்பதிவில், தங்கள் கடமையை செய்யாதவர்களை “பெண் கல்வி” சுட்டெரிக்கட்டும் என சாபம் விடும் தொனியில் பதிவிட்டுள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.