நாமும் பதினாறு குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாமே என முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 30க்கும் மேற்பட்ட தம்பதிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்வு, இன்று (அக்.21) சென்னையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.
அப்போது பேசிய அவர், பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க எனக் கூறுவார்கள். அந்த 16 என்றால் 16 குழந்தைகள் அல்ல, 16 செல்வங்கள் ஆகும். அவை என்னவென்று கேட்டால், மாடு, மனை, மனைவி, மக்கள், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், நிலம், நீர், வயது, வாகனம், பொன், பொருள், புகழ் ஆகியவதான் பதினாறு செல்வங்கள் ஆகும்.
இவ்வாறான பதினாறு செல்வங்களைப் பெற்று வாழுங்கள் என அப்போது வாழ்த்தினார்கள். ஆனால் தற்போது இவ்வாறு வாழ்த்துவதில்லை, தற்போது அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள் என்றே கூறுகிறோம். ஆனால், இன்று நாடாளுமன்த் தொகுதிகளின் எண்ணிக்கை குறைகின்ற போது, ஏன் நாம் அளவோடு பெற்று வளமோடு வாழ வேண்டும், நாமும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழலாமே என்ற நிலை தோன்றுகிறது” எனப் பேசினார்.
முன்னதாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, மாநிலத்தில் மக்கள் தொகையை அதிகரிப்பதற்கான திட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். இவ்வாறு பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், இந்தியா கூட்டணியில் உள்ள திமுக தலைவரும் ஒருசேர ஒரே கருத்தை கூறுவது பேசு பொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: கோர்ட் சொன்னாலும் நான் கேட்கல.. கடைசியாக இருக்கும் வரை.. உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
இதனை ஆராய்ந்து பார்த்தால், மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதே இதன் பொருள் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.