டாப் நியூஸ்

மன்னர் மீது சகதியை அடித்த மக்கள்.. ஸ்பெயினில் மீளா துயரம்!

ஸ்பெயினில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கச் சென்ற அந்நாட்டு மன்னர் மீது மக்கள் சகதியை வாரியது பேசுபொருளாகியுள்ளது.

மத்ரிட்: உலகின் மிக முக்கிய சுற்றுலா நாடுகளில் ஒன்றான ஸ்பெயினின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக, அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். முக்கியமாக, ஸ்பெயினின் வலென்சியா பிராந்தியம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இவ்வாறு வலென்சியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, இதுவரை 200க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த நிலையில், பலரைக் காணவில்லை. எனவே, அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளிட்ட தன்னார்வலர்கள் பலரும் தொடர்ந்து தற்போது வரை போராடி வருகின்றனர்.

இதனால், வெள்ளத்தில் பொதுமக்கள் பலரின் வீடுகள், பாலங்கள் ஆகியவை சேதம் அடைந்தன. மேலும், வலென்சியாவில் உள்ள ஃபைபோர்ட்டா பகுதியில் மட்டும் சுமாா் 60 பேர் உயிரிழந்து உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இந்த நிலையில் தான், நேற்று வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட ஃபைபோர்ட்டா நகரத்தில், வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிடுவதற்காக ஸ்பெயின் மன்னர் பெலிப்பே, தனது மனைவியும் அந்நாட்டு ராணியுமான லெட்டிசியாவுடன் சென்றார். அப்போது, மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், ஸ்பெயின் மன்னர் மீது மண்ணை அள்ளி திடீரென வீசினர்.

இதையும் படிங்க: ஓவனில் கிடந்த இந்தியப் பெண்ணின் உடல்.. கனடாவில் கொடூரம்!

இதனால் திகைப்படைந்த மன்னர், தனது தலையைக் குனிந்தார். பின்னர், அவரது காவலர்கள் மன்னரை சூழ்ந்தனர். இருப்பினும், அங்கு இருந்த பாதிக்கப்பட்ட மக்களுடன் நிதானமாக நின்று பேசுவதற்கு மன்னரும், அவரது மனைவியும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அதில் பலனில்லை.

இதனிடையே, பாதுகாப்பு கருதி மன்னரையும், அவரது மனைவியையும் பாதுகாவலர்கள் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். மேலும், அங்கிருந்த மக்கள் ஸ்பெயின் பிரதமரை கடுமையாக விமர்சித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அது மட்டுமல்லாமல், இந்த நிகழ்வு சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.