டாப் நியூஸ்

ரூ.27 கோடி லஞ்சமா? ஓபிஎஸ் அணி நிர்வாகி இடங்களில் ED சோதனை!

ஓபிஎஸ் பிரிவில் உள்ள வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம், சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி, 11 அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

2011 – 2016 அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக வைத்திலிங்கம் இருந்தார். தற்போது தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கீழ் உள்ள அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவில் ஆதரவாளராகவும் உள்ளார். இந்த நிலையில் தான் வைத்திலிங்கத்துக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தாம்பரம் வீட்டு வசதி குடியிருப்பு பணியின் போது கட்டுமான நிறுவனத்திடம் 27 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இச்சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதன்படி, சென்னை பெருங்களத்தூரில் உள்ள ஸ்ரீராம் குழுமத்துக்குச் சொந்தமான ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் அண்ட் இன்ப்ராட்சர் பிரைவேட் என்னும் நிறுவனம், 57.94 ஏக்கர் நிலத்தில் 24 பிளாக்குகளாக ஆயிரத்து 453 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட திட்ட அனுமதி கேட்டு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் (CMDA) கடந்த 2013ஆம் ஆண்டு விண்ணப்பித்தது.

ஆனால், அந்த திட்டத்துக்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாக அனுமதி வழங்காத நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதி வழங்குவதற்கு அதிக லஞ்சம், அப்போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கத்துக்கு வழங்கப்பட்டதாக சென்னையைச் சேர்ந்த அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருந்தது.

இதையும் படிங்க: ரூ.411 கோடி அரசு நிலம் அபேஸ்? அறப்போர் இயக்கம் கைகாட்டும் அமைச்சர்!

மேலும், ஸ்ரீராம் நிறுவனம் குடியிருப்பு கட்ட திட்ட அனுமதிக்காக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு 27.9 கோடி ரூபாய் லஞ்சமாக வழங்கியதாகவும், அந்த லஞ்சப் பணம் பாரத் கோல் கெமிக்கல் பிரைவெட் லிமிடெட் மூலம் வைத்திலிங்கத்தின் மகன்களான பிரபு, சண்முகபிரபு, உறவினர் பன்னீர்செல்வம் ஆகியோர் இயக்குனர்களாக இருந்த முத்தம்மாள் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு கடனாக வழங்கப்பட்டது போல காட்டப்பட்டுள்ளதாகவும் அறப்போர் இயக்கம் புகாரில் தெரிவித்திருந்தது.

Hariharasudhan R

Recent Posts

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

50 minutes ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 hour ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 hour ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

2 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

3 hours ago

இட்லி வர தாமதானதால் ஆத்திரம்.. ஹோட்டல் கடை உரிமையாளரின் மண்டை உடைப்பு!

வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…

3 hours ago

This website uses cookies.