டாப் நியூஸ்

’அப்பா’ பட பாணியில் நெல்லையில் சம்பவம்.. போலீசார் விசாரணையில் பகீர் தகவல்

நெல்லையில் உள்ள பிரபல நீட் பயிற்சி மையம் ஒன்றில் பயிலும் மாணவர்களை அதன் உரிமையாளர் பிரம்பால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி: கேரளாவைச் சேர்ந்தவர் ஜலாலுதீன் அஹமத் வெட்டியாடன். இவர் பிரபல பயிற்சி மையத்தின் பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஒரு நீட் பயிற்சி மையத்தை உருவாக்கி உள்ளார். இந்த பயிற்சி மையத்தில் படித்த 12 பேர் கடந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், நீட் பயிற்சிக்காக வரும் மாணவர்களிடம் இருந்து சராசரியாக 60 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், இந்தப் பயிற்சி மையம் சார்பாக மாணவர்கள், மாணவிகளுக்கு என தனித்தனியாக விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து இங்கு வரும் மாணவர்களுக்கு தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தினமும் 12 மணி நேரத்திற்கு மேல் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதால், மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாகவும் பெற்றோர் கூறியுள்ளனர். மேலும், இந்த பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலை நடந்த தேர்வு முடிந்து, மற்றொரு ஒரு ஆசிரியர் வருவதற்கு முன்பு இடைப்பட்ட நேரத்தில் வகுப்பறையில் தூங்கியதாக கூறப்படுகிறது.

இதனை வகுப்பறையில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் உறுதிப்படுத்திய அம்மையத்தின் உரிமையாளரும், பயிற்சியாளருமான ஜலாலுதீன் அஹமத் வெட்டியாடன், மாணவர்களை பிரம்பால் சரமாரியாக தாக்கியுள்ளார், இதனால் மாணவர்களுக்கு கை, கால், முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது, அதேபோல், நெல்லை புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள இந்த பயிற்சி மையம் இரண்டாம் தளத்தில் அமைந்திருப்பதால், அங்கு வரக்கூடிய மாணவர்கள் பயிற்சி மைய வாசலிலே காலணியை விட்டு விட்டு வர வேண்டும், அதற்காக பெண்களுக்கு தனி பகுதி ஒதுக்கீடு (செய்யப்பட்ட நிலையில், காலனியை முறையாக அடுக்கவில்லை என்பதற்காக கையில் காலணி எடுத்து வந்து வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவர்களைப் பார்த்து இந்த காலணி யாருடையது என கேட்டு, என்னுடையது என ஒரு மாணவி எழுந்து வந்தவுடன், அந்த மாணவி மீது தூக்கி வீசுவது போன்றும், அந்த காலணி சக மாணவிகள் மீது விழுவது போன்ற நிகழ்வும் அரங்கேறி உள்ளது.

இதையும் படிங்க : விஜய் கட்சியில் இணைகிறாரா KPY பாலா? த.வெ.க மாநாட்டில் பங்கேற்க மும்முரம்!

இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பெயர் சொல்ல விரும்பாத நபர் ஒருவர், மாணவர்களை தாக்குவது போன்ற சிசிடிவி காட்சிகள் மற்றும் காலணியை மாணவி மீது வீசுவது போன்ற ஆதாரத்துடன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் சிஎஸ்ஆர் பதிவு செய்த போலீசார், இந்த சம்பவம் குறித்து பயிற்சி மைய உரிமையாளர், பயிற்சியாளர் மற்றும் அங்கு பணியாற்றும் மற்ற ஊழியர்கள், மாணவர்களிடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கும் இது தொடர்பாக புகார் சென்றுள்ள நிலையில், அவர்களும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

2 days ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

2 days ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

2 days ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

2 days ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

2 days ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

2 days ago

This website uses cookies.