மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் தெருவில் செயல்பட்டு வரும் விசாகா தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் இன்று காலை 5 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் பரிமளா, சரண்யா ஆகிய இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், தனியார் விடுதி வார்டன் புஷ்பா, செவிலியர் கல்லூரி மாணவி ஜனனி மற்றும் கனி ஆகிய மூன்று பேர் எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீ விபத்து நடைபெற்ற இடத்தையும் , மூன்று பேர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனையையும் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.
அதன்பின் பத்திரிகையாளர்களுக்கு கொடுத்த பேட்டியின் போது, கள்ளச்சாராயத்துக்கு இறந்தவர்களுக்கு இந்த அரசு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுத்தது, அதேபோல் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இந்த அரசு இழப்பீடு தொகையை தர வேண்டும்.
மேலும் படிக்க: மனைவியுடன் ஒரே கட்டிலில் இருந்த நண்பன்.. துவண்டு போன கணவன் : உயிரை பறித்த உல்லாசம்… கடைசியில் ட்விஸ்ட்!
அது பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறு ஆறுதலாக அமையும், அதே போல் கடந்த வருடம் இதுபோல் உள்ள கட்டிடத்திற்கு மதுரை மாநகராட்சி சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இது இந்த அரசின் மெத்தனப்போக்கை காட்டுகிறது.
இனியும் மதுரை மாநகராட்சி மந்த நிலையில் இல்லாமல் உடனடியாக இது போல் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து அகற்ற வேண்டும் என தெரிவித்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.