டாப் நியூஸ்

50 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல்கள்.. ஃபிரிட்ஜிற்குள் காத்திருந்த அதிர்ச்சி.. பதற வைக்கும் பின்னணி!!

நேபாளத்தை சேர்ந்தவர் சரண்சிங் ராணா இவரது மனைவி மீனா. இவர்கள் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு நெலமங்களா பகுதிக்கு குடிவந்தனர்.

இவர்களுக்கு லட்சுமி, மகாலட்சுமி என்ற 2 மகள்களும் உக்கிம்சிங், நரேஷ் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். 2-வது மகளான மகாலட்சுமிக்கும் ஹேமந்த்தாஸ் (32) என்பருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். இதற்கிடையில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மகாலட்சுமி கணவரை விட்டு பிரிந்து பெங்களூரு வயாலிகாவல் அருகே உள்ள பசப்பா கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

மேலும் இவர் அதே பகுதியில் உள்ள ஒரு மாலில் வேலை பார்த்து வந்தார். இவரை தினமும் ஒரு வாலிபர் வேலைக்கு அழைத்து சென்றார். கடந்த 2-ந் தேதியிலிருந்து மகாலட்சுமி வீடு பூட்டப்பட்டு கிடந்தது.

அவரை தாய் மற்றும் குடும்பத்தினர் பலமுறை தொடர்பு கொண்டும் பேச முடியவில்லை. இதையடுத்து மகாலட்சுமியின் தாய் மீனா மற்றும் சகோதரர் உக்கிம்சிங் ஆகியோர் நேற்று முன்தினம் பெங்களூருவில் மகாலட்சுமி வசித்த வீட்டிற்கு வந்தனர்.

அப்போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வேறு சாவி மூலம் பூட்டை திறந்து உள்ளே சென்றனர்.

அப்போது மகாலட்சுமி கொலை செய்யப்பட்டு குளிர்சாதன பெட்டியில் அவரது உடல் துண்டு துண்டாக வெட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உடல்பாகங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க: பள்ளி மாணவிகள் நடத்திய வளைகாப்பு விவகாரம் : நீக்கப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் செய்த சம்பவம்!

முதலில் மகாலட்சுமியின் உடல் பாகங்கள் 30 துண்டுகளாக வெட்டி வைக்கபட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் பிரேத பரிசோதனையில் அவரது உடல் பாகங்கள் 50 துண்டுகளாக வெட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து உடல் பாகங்கள் ஒவ்வொன்றும் தனியாக தனியாக பிரித்து வைக்கப்பட்டது. மேலும் மகாலட்சுமியின் தலையை 3 பகுதிகளாக வெட்டியிருப்பதும், கால்கள் துண்டிக்கப்பட்டு குடல், தலைமுடி உள்ளிட்ட பிற பாகங்கள் பிளாஸ்டிக் கவரில் தனியாக கட்டப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மகாலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெங்களூரு பவுரிங் ஆஸ்பத்திரியில் தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் இந்த பிரேதப் பரிசோதனை நீடித்தது.

வழக்கமாக பிரேதப் பரிசோதனை செய்யும் போது ஒருவரின் உடல் முழுமையாக இருக்கும் ஆனால் மகாலட்சுமியின் உடல்பாகங்கள் சிறு, சிறு பாகங்களாக இருந்தது. இதனால் முதலில் அவரது உடல்பாகங்களை வரிசை எண்போட்டு டாக்டர்கள் ஒன்றாக சேர்த்தனர்.

அதில் ஏதேனும் பாகங்கள் விடுபட்டுள்ளதா? என்றும் அதன் பிறகு உடலில் ஏதேனும் காயங்கள் உள்ளதா? என்றும் பார்க்கப்பட்டது. மகாலட்சுமியின் உடலை கூறுபோடுவதற்கு முன்னதாக அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதை அறிய உடலில் காயங்கள் ஏதேனும் இருக்கிறதா? என்று பரிசோதிக்கப்பட்டது.

மேலும் கொலையானது மகாலட்சுமி தான் என்பதை அடையாளம் காண உடல் பாகங்கள் தனியாக தனியாக டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் உடல் பாகங்கள் அனைத்தும் ஒன்றாக சேர்தது சிடி ஸ்கேன் செய்யப்பட்டது.

மேலும் கொலைக்கு முன்பாக பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை செய்யப்பட்டாரா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது. டாக்டர்களுக்கு பெரும் சவாலாக விளங்கிய இந்த பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தெரிகிறது.

பிரதேப் பரிசோதனை முடிந்து மகாலட்சமியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க்பபட்டது. கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொடூர கொலை வழக்கை விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக மகாலட்சுமி வேலை பார்த்து வந்த மாலில் பணியாற்றும் உத்தரகாண்டை சேர்ந்த வாலிபர் உள்பட 4 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் 4 பேரும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டனர். எனவே அவர்கள் பிடிப்பட்டால் தான் முழு விவரமும் வெளியாகும்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட மகாலட்சுமி பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் பயன்படுத்திய 4 சிம்கார்டுகளும் மகாலட்சுமி வசித்த வீட்டை சுற்றியுள்ள கண்காணிப்பு காமிராக்களில் சில முக்கிய காட்சிகள் சிக்கி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!

தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…

4 hours ago

ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை.. திமுக பாணியை கையில் எடுத்த அண்ணாமலை!

மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…

4 hours ago

சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?

STR 49  “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…

5 hours ago

தனிமனிதனை வேட்டையாடுவதால் வரலாறை மாற்ற முடியாது : கீழடி அமர்நாத் மாற்றம்.. சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…

5 hours ago

கொரேனா பரவல்.. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? உண்மை இதுதான்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…

5 hours ago

தக் லைஃப் தோல்வியால் சிம்புவுக்கு வந்த பிரச்சினை? கடைசில இப்படி ஆகிடுச்சே!

சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…

6 hours ago

This website uses cookies.