டாப் நியூஸ்

தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி எது? வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது

தமிழகத்தில் மொத்தம் 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி தெரிய வந்துள்ளது.

சென்னை: 01.01.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, இன்று (அக்.29) அனைத்து மாவட்டங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வரைவு வாக்காளர் பட்டியல்கள் https://www.elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வாறு புகைப்படத்துடன் கூடிய ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2025-ன் வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழ்நாட்டில் தற்போது 6 கோடியே 27 லட்சத்து 30 ஆயிரத்து 588 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3 கோடியே 7 லட்சத்து 90 ஆயிரத்து 791 ஆண் வாக்காளர்கள், 3 கோடியே 19 லட்சத்து 30 ஆயிரத்து 833 பெண் வாக்காளர்கள் மற்றும் 8 ஆயிரத்து 964 மூன்றாம் பாலினத்தவர் வாக்காளர்கள் உள்ளனர்.

மாநிலத்திலேயே அதிக அளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக 6 லட்சத்து 76 ஆயிரத்து 133 வாக்காளர்களுடன், செங்கல்பட்டு மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் (27) தொகுதி உள்ளது. இங்கு 3 லட்சத்து 38 ஆயிரத்து 183 ஆண் வாக்காளர்கள், 3 லட்சத்து 37 ஆயிரத்து 825 பெண் வாக்காளர்கள் மற்றும் 125 மூன்றாம் பாலினத்தவர் வாக்காளர்கள் இருக்கின்றனர்.

அதேபோல், மாநிலத்திலேயே குறைந்த அளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக 1 லட்சத்து 73 ஆயிரத்து 230 வாக்காளர்களுடன் நாகப்பட்டினம் மாவட்டத்தின் (164) கீழ்வேளுர் தொகுதி உள்ளது. இங்கு 85 ஆயிரத்து 65 ஆண் வாக்காளர்கள், 88 ஆயிரத்து 162 பெண் வாக்காளர்கள் மற்றும் 3 மூன்றாம் பாலினத்தவர் வாக்காளர்கள் உள்ளனர்.

இதையும் படிங்க : ஊழலை பற்றி விஜய் பேசலாமா? பகீர் கிளப்பிய பிரபல தயாரிப்பாளர்!

மேலும், இவற்றில் திருத்தம், நீக்கம் ஏதேனும் இருப்பின் அலுவலக வேலை நாட்களில் வாக்குச் சாவடி நிலை அலுவலர் அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் படிவங்களை அளிக்கலாம். பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

11 seconds ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

13 minutes ago

ஜெகன்மூர்த்தி வீட்டுக்கு சென்ற பொற்கொடி ஆம்ஸ்டிராங்.. மனைவியை சந்தித்து ஆதரவு..!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…

48 minutes ago

இவருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா? வீட்டு விசேஷத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் செய்த காரியம்! வைரல் வீடியோ…

இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…

60 minutes ago

விடாது கருப்பு போல் துரத்தும் சாபம்? காந்தாரா ஹீரோவை குறி வைத்த மரணம்! ஒரு வேளை இருக்குமோ…

தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…

2 hours ago

நள்ளிரவில் முன்னாள் அமைச்சர் தியானம்.. இபிஎஸ் மீண்டும் முதலமைச்சராக வேண்டி வழிபாடு!!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…

2 hours ago

This website uses cookies.