டாப் நியூஸ்

சரஸ்வதியை வணங்கிய ஆளுநர்.. மீண்டும் முற்றிய மோதல்

படிக்கும் மேஜையில் சர்ஸ்வதியின் புகைப்படத்தை வணங்கிவிட்டு படித்தால் அறிவு பெருகும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இன்று (அக்.24) சென்றார். தொடர்ந்து, அங்கு அவர் மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது, “எத்தனை பேர் கல்விக் கடவுளான சரஸ்வதியின் படத்தை படிக்கும் மேஜையில் வைத்து உள்ளீர்கள்?” என மாணவ, மாணவிகளிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு மாணவர்கள் பதில் அளித்தனர். பின்னர் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ““இனிவரும் காலங்களில் படிக்கும் மேஜையில் கடவுள் சரஸ்வதியின் புகைப்படத்தை வைத்து வணங்கி விட்டு, படித்தால் நிச்சயம் அறிவு பெருகும்” என்று அறிவுறுத்தினார்.

அது மட்டுமல்லாமல், சரஸ்வதி வந்தனம் பாடல், பள்ளியில் பாட பழக்கப்படுத்த வேண்டும் என்றும் அவர் பள்ளி நிர்வாகத்தையும் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு ஆளுநர் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51A(h) பிரிவில் “It shall be the duty of every citizen of India to develop scientific temper, humanism and the spirit of inquiry and reform” என வரையறுத்துள்ளார். அறிவியல் சார்ந்த சிந்தனைகளை மாணவர்களிடம் வளர்ப்பதுதான் நமது கடமையாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சிம்லாவில் சொந்த வீடு.. என்னை விட கம்மிதான் .. சொல்லாமல் சொன்ன ராகுல்

சமீபத்தில், டிடி தமிழ் தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற இந்தி மாதம் இறுதி நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று இருந்தார். அப்போது பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வாக்கியம் இடம் பெறாமல் இருந்தது.

பின்னர், இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். அதற்கு ஆளுநர் தரப்பில் ‘மலிவான அரசியல்’ என விமர்சிக்கப்பட்டது. பின்னர், அதற்கும் ஸ்டாலின் பதில் அளித்திருந்தார். இந்த நிலையில் தான் மீண்டும் சரஸ்வதி குறித்து ஆளுநர் பள்ளியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.