வருடத்திற்கு 2 முறையாவது முதலமைச்சர் வெளிநாடு சென்ரு முதலீடுகளை பெற்று வரவேண்டும், சென்னையில் பார்முலா 4 கார் ரேஸ் மூலம் உலக அளவில் சென்னை கவனத்தை ஈர்ர்க்கும், தமிழ்நாட்டில் தமிழ் மொழியே திணிக்கப்படுவதில்லை என கோவையில் காங்கிரஸ் நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்தியபின் செய்தியாளர்களிடம் பேசும்போது கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.
கோவை துடியலூர் அருகில் உள்ள பன்னீர்மடை மதுராநகர் பகுதியில் குடியிருக்கும் காங்கிரஸ் நிர்வாகி மோகன் ராஜ் கவுசல்யா ஆகியோரின் மகன் சத்தியசீலன் பிரீத்தி இவர்களின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கார்த்திக் சிதம்பரம் எம்.பி. மணமக்களை வாழ்த்தினார்.
தொடர்ந்து செய்தியாளர் சந்திக்கும் போது கூறியதாவது தமிழ்நாட்டில் முதலமைச்சர் வெளிநாடுகளில் சென்று முதலீடு பெறுவது ஒரு தேவையான ஒன்று. வருடத்திற்கு இரண்டு முறை மூன்று முறை சென்று கூட முதலீடு செய்யலாம் அதை நான் வரவேற்கிறேன்.
இதனால் பல வேலை வாய்ப்பை உருவாக்க வாய்ப்புள்ளது. சென்னையில் கார் ரேஸ் போன்ற நிகழ்ச்சி நடத்துவதால் இந்த கார் ரேஸ் மூலம் சென்னை மாநகரம் உலக அளவில் தெரியப்படுத்தக்கூடிய பகுதியாக அறியப்படுகிறது .அதை நான் வரவேற்கிறேன் .
மேலும் கூவம்நதியை சுத்தப்படுத்துவதாக பல கோடி ரூபாய் செலவு செய்ததாக மேயர் தன்னுடைய செய்தியில் சொல்லி இருக்கிறார்.
அதற்கு நான் முழுமையான வெள்ளை அறிக்கையை கேட்டு இருக்கிறேன். அதில் சில செய்யப்பட்ட தொகை சரியானது தானா, தூய்மை செய்தும் ஏன் தூய்மை அடையவில்லை அதற்கான காரணம் என்ன அதை சரி செய்ய என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் அதை நான் கேட்டிருக்கிறேன். என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.