ஆட்சி, அதிகாரத்தில் நிச்சயம் பங்கு வேண்டும் என திமுக அரசிடம் வலியுறுத்துவோம் என காங்கிரஸ் எம்பி கூறியுள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையக்குழு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடந்த கூட்டத்தில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஜோ.அருண் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 286 பயனாளிகளுக்கு ரூ. 38 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி ஜோதிமணி,
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது தேர்தல் நேரத்தில் பேச வேண்டிய விஷயம் என்பதை நினைக்கிறோம்.
உரிய நேரத்தில் கூட்டணி குறித்து பேசும்போது மற்ற விசயங்களை பேசுவோம். அனைத்து அரசியல் கட்சிகளுமே ஆட்சிக்கு வர வேண்டும் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று விரும்புவார்கள்.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி இல்லை என்றாலும், ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் இந்தியா கூட்டணியை சேர்ந்த அனைத்து கட்சிகளும் பங்கேற்க இருக்கிறோம் மதுவிலக்கு நிலைப்பாட்டை பொருத்தவரை யாருக்கும் இரு வேறு கருத்து கிடையாது.
அனைத்து கட்சியினருமே மதுவிலக்கு வேண்டுமென்றே விரும்புகிறார்கள் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும். மது உட்பட அனைத்து விதமான போதைப் பொருட்களும் இல்லாத சமுதாயத்தையே நாம் விரும்புகிறோம் என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.