டாப் நியூஸ்

மரண நகரமாக மெரினா மாறியது ஏன்? இந்த அவலத்துக்கு காரணம் இதுதான்..!!

விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண கூடிய கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்திற்காக காரணம் என்ன என்று அலசுவோம்

நேற்று மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் சாகச நிகழ்வு நடைபெற்றது. இதைக் காண குவிந்த மக்களில் இதுவரை 5 பேர் உயிரிழந்தனர். இந்த மரணத்திற்கு முக்கிய காரணம் இதுதான்

சுமார் 13 முதல் 15 லட்சம மக்கள் கூடுவார்கள் என்பது எதிர்பாராத ஒன்று. ஒருவேளை எதிர்பார்த்திருந்தாலும் 15 லட்சம் பேர் வரை சமாளிக்க திட்டமிடல் இல்லாமல் போனதும் ஒரு காரணம்.

அண்ணா சாலை , மெரினா சாலையில் பிற்பகல் நேரத்தில் போலீசார் இல்லாததும் ஒரு காரணம்.

போலீசார் அதிகமாக மெரினாவிலேயே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனனர். கடுமையான வெயில், நீர் இழப்பு, ஹீட் ஸ்ட்ரோக் வர காரணமாக அமைந்திருக்கிறது.

தண்ணீர் பந்தல் ல்லாததால், கடைகளில் மட்டுமே தண்ணீர் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்கும் லைனில் நின்று வாங்கே வேண்டும்.

விமான சாகசம் நடந்த போது மெரினாவில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது. இதில் கடுமையான கூட்ட நெரிசல் என்பதால் மக்கள் தாகத்தில் தவித்துள்ளனர்.

அதே போல மக்கள் ஒரே நேரத்தில் கிளம்பியதும் தவறு. சில சாலைகளில் கார்களை உள்ளே விட்டதால் மக்கள் வெளியேற முடியாமல் திணறினர்.

காமராஜர் சாலையை இணைக்கும் சாலைகளில் உள்ள கடைகள் மூடப்பட்டது. டீக்கடைகள், இளநீர் கடைகள் என மூடப்பட்டதால் மக்கள் நீர் இழப்பு காரணமாக தவித்துள்ளனர்.

ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடிய மக்களால், காற்றோட்டம் இல்லாமல் மூச்சு திணறல், படபடப்பு, நீர் இழப்பு ஏற்பட்டுள்ளது. பலரும் மயக்கம் அடைந்தும் வெளியேற முடியாமல் தவித்தனர். நெரிசல் காரணமாக மருத்துவமனைக்கும் அழைத்து செல்ல முடியாத சூழல் உருவானது.

தற்காலிக மருத்து சேவை இருந்தும், அவசர சிகிச்சை மட்டுமே செய்ய முடியும் என்பதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது சவாலாக மாறியுள்ளது. இவையெல்லாம் முன்கூடியே திட்டமிடாமல் இருந்ததால் தான் இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.