விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண கூடிய கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்திற்காக காரணம் என்ன என்று அலசுவோம்
நேற்று மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் சாகச நிகழ்வு நடைபெற்றது. இதைக் காண குவிந்த மக்களில் இதுவரை 5 பேர் உயிரிழந்தனர். இந்த மரணத்திற்கு முக்கிய காரணம் இதுதான்
சுமார் 13 முதல் 15 லட்சம மக்கள் கூடுவார்கள் என்பது எதிர்பாராத ஒன்று. ஒருவேளை எதிர்பார்த்திருந்தாலும் 15 லட்சம் பேர் வரை சமாளிக்க திட்டமிடல் இல்லாமல் போனதும் ஒரு காரணம்.
அண்ணா சாலை , மெரினா சாலையில் பிற்பகல் நேரத்தில் போலீசார் இல்லாததும் ஒரு காரணம்.
போலீசார் அதிகமாக மெரினாவிலேயே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனனர். கடுமையான வெயில், நீர் இழப்பு, ஹீட் ஸ்ட்ரோக் வர காரணமாக அமைந்திருக்கிறது.
தண்ணீர் பந்தல் ல்லாததால், கடைகளில் மட்டுமே தண்ணீர் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்கும் லைனில் நின்று வாங்கே வேண்டும்.
விமான சாகசம் நடந்த போது மெரினாவில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது. இதில் கடுமையான கூட்ட நெரிசல் என்பதால் மக்கள் தாகத்தில் தவித்துள்ளனர்.
அதே போல மக்கள் ஒரே நேரத்தில் கிளம்பியதும் தவறு. சில சாலைகளில் கார்களை உள்ளே விட்டதால் மக்கள் வெளியேற முடியாமல் திணறினர்.
காமராஜர் சாலையை இணைக்கும் சாலைகளில் உள்ள கடைகள் மூடப்பட்டது. டீக்கடைகள், இளநீர் கடைகள் என மூடப்பட்டதால் மக்கள் நீர் இழப்பு காரணமாக தவித்துள்ளனர்.
ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடிய மக்களால், காற்றோட்டம் இல்லாமல் மூச்சு திணறல், படபடப்பு, நீர் இழப்பு ஏற்பட்டுள்ளது. பலரும் மயக்கம் அடைந்தும் வெளியேற முடியாமல் தவித்தனர். நெரிசல் காரணமாக மருத்துவமனைக்கும் அழைத்து செல்ல முடியாத சூழல் உருவானது.
தற்காலிக மருத்து சேவை இருந்தும், அவசர சிகிச்சை மட்டுமே செய்ய முடியும் என்பதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது சவாலாக மாறியுள்ளது. இவையெல்லாம் முன்கூடியே திட்டமிடாமல் இருந்ததால் தான் இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.