டாப் நியூஸ்

யாருக்கெல்லாம் நாளை விடுமுறை? எந்த துறைகளெல்லாம் நாளை இயங்கும்?

அத்தியாவசியத் தேவைகள் சார்ந்த துறைகள் தவிர, மற்ற அனைத்து துறைகளுக்கும் விடுமுறை அளிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும், அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவே நாளை மறுநாள் (அக்.17) காலை வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரத்தை நெருங்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. சில சுரங்கப்பாதைகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னை வேளச்சேரி பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளதால், பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் படகுகள் மூலம் பொதுமக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர். அதேபோல், வியாசர்பாடியிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மீட்கப்பட்டு அருகில் தயார் நிலையில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: எந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன அலர்ட்? சென்னைக்கு பேரதிர்ச்சி!

இதனிடையே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாளை (அக்.16) சென்னையில் உள்ள தனியார் அலுவலகங்கள் மிகவும் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டோ அல்லது வீட்டிலிருந்தோ பணியாற்ற அறிவுரை வழங்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதேநேரம், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை, உள்ளாட்சி நிர்வாகத் துறைகள், பால் வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை, மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரத்துறை, காய்கறிகள், இதர அத்தியாவசிப் பொருட்களுக்கான போக்குவரத்து, மாநகர போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரயில், MRTS, ரயில்வே, விமான நிலையம், விமான போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பேரிடர் மீட்பு நிவாரண பணிகள் மேற்கொள்ளும் துறைகள் மற்றும் பிற கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை நாளை வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கனமழை எதிரொலியாக சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நாளை விடுமுறை அறிவித்து உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அல்லி அறிவித்துள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

8 minutes ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

29 minutes ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

45 minutes ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

53 minutes ago

பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு..கேள்வி கேட்ட செய்தியாளர் : நக்கலாக பதில் சொன்ன மேயர் பிரியா!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…

1 hour ago

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணம் இதுதானா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…

2 hours ago

This website uses cookies.