பாஜக எங்கு வளர்ந்தாலும் ஆபத்து என்பதாலேயே கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் செய்வதாக திருமாவளவன் தெரிவித்தார்.
அரியலூர் கொல்லாபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வணிகர் அணி சார்பில் திருமாவளவன் மணிவிழா மற்றும் வணிகர் அணி மாநாடு நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டனர்.
பின்னர் கூட்டத்தின் மத்தியில் பேசிய திருமாவளவன் பாஜக தமிழகத்தில் வளர்ந்தாலும், கர்நாடகாவில் வளர்ந்தாலும், ஏன் இந்தியாவின் எந்த மூலையில் வளர்ந்தாலும் ஆபத்து என்பதாலேயே கர்நாடகாவில் காங்கிரஸிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக கூறினார். மேலும் வீட்டில் ஒரு மூலையில் தீப்பிடித்தால் ஒட்டுமொத்த வீட்டிற்கும்தானே ஆபத்து என்றும், மேலும் ஒரு குடம் பாலில் ஒரே ஒரு துளி விஷம் விழுந்தாலும் நஞ்சுதான் என்று பாஜகவை விமர்சனம் செய்தார்.
மேலும் வணிகர்களுக்கு என்றும் விசிக துணை நிற்கும் எனவும் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அரியலூர், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விசிக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.