வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீடு வழக்கு : நாளை தீர்ப்பு வெளியிடுகிறது உச்சநீதிமன்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 March 2022, 9:12 pm
Supreme court - Updatenews360
Quick Share

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. அதனை விசாரித்த நீதிபதிகள் 10.5% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பளித்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் 10.5% உள் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 603

0

0