10ம் வகுப்பு பொதுத்தேர்வில் விருப்பப் பாடத்தின் மதிப்பெண்களுக்கு இனி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 500 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தமிழ், ஆங்கிலத்தை தவிர்த்து பிற மொழியை விருப்பமாக எடுத்து பயில்பவர்களும் இருந்து வருகின்றனர். தமிழகத்தில் சுமார் 4000 பேர் பிற மொழியை விருப்பமாக எடுத்து பயின்று வருகின்றனர்.
இதற்கு முன்பு வரை விருப்பப்பாடம் எடுத்து படிக்கும் மாணவர்களின் மதிப்பெண்கள் மதிப்பெண் சான்றிதழில் இடம் பெற்று வந்தது. அவர்கள் 35 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்று இருந்தாலும், அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், உருது அகாடமி சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில், இனி விருப்பப்பாடம் எடுத்து பயிலும் மாணவர்களின் மதிப்பெண்களை தேர்ச்சி மதிப்பெண்ணாக எடுத்துக் கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழ், ஆங்கிலத்தை தவிர்த்து பிற மொழியை விருப்ப பாடமாக எடுத்து படிக்கும் மாணவர்கள், இனி அந்தப் பாடத்தில் குறைந்தபட்சம் 35 மதிப்பெண்கள் எடுத்தால் தான் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. இது, அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.