தெலுங்கானா : ஐதராபாத் அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி 11 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் சைதன்யா நகரிலுள்ள தனியாருக்கு சொந்தமான நீச்சல் குளத்திற்கு 11 வயது மாணவன் மனோஜ் நீச்சல் அடிப்பதற்காக சென்றான்.
திடீரென்று தண்ணீருக்குள் குதித்த மனோஜ் பின்னர் மேலே வரவில்லை.
இதனை பார்த்து கொண்டு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து நீச்சல் குள நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தனர்.
இந்தநிலையில் தண்ணீருக்குள் இருந்து மனோஜ் பிணமாக மீட்கப்பட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து மனோஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்துகின்றனர்.
நீச்சல் பயிற்சிக்காக வருபவர்களுக்கு நீச்சல் குளத்தை நிர்வகிப்பவர்கள் லைஃப் ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை கொடுப்பது இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.