+2 மாணவன் இறப்பில் திடீர் திருப்பம்… போதை ஊசி போட்டதால் மரணம்? சுடுகாட்டில் உடலை தோண்டி எடுத்த போலீசார்!!!

சேலம் தாதகாப்பட்டி வேலூர் புது தெரு பகுதியை சேர்ந்த மாணிக்கம். இவரது மனைவி செல்வி இவரது மகன் கிரி பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஏழாம் தேதி இரவு கிரி திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மாணவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் மாணவன் உடலை மணினுர் சிவசக்தி நகர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். இந்த நிலையில் போதை ஊசி போட்டுக் கொண்டதால் மாணவன் உயிரிழந்ததாக காவல்துறையினருக்கு புகார் வந்தது.

அதன் பெயரில் உதவி ஆணையாளர் அசோகன் காவல் ஆய்வாளர் சந்திரகலா கொண்டலாம்பட்டி காவல் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் மாணவனின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மாணவனின் பெற்றோர் மஞ்சள் காமாலை நோயால் இறந்ததாக தெரிவித்தனர். இருப்பினும் எனது மகன் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தந்தை மாணிக்கம் புகார் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை தோண்டி எடுத்து பெய்த பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது இன்று உதவி ஆணையாளர் அசோகன் காவல் ஆய்வாளர் சந்திரகலா கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் ஆனந்தி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவர் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் சுடுகாட்டுக்குச் சென்று இன்று உடலை தோண்டி மாணவன் உடலை எடுத்து பெய்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

இது குறித்து காவல்துறை அதிகாரி கூறும் போது மாணவனின் இறப்பில் சந்தேகம் இருப்பதால் தற்போது பிரேத பரிசோதனை நடைபெற்றுள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் போதை ஊசி போட்டு இறந்தாரா அல்லது நோயினால் இறந்தாரா இல்லை முன்விரோத காரணமா என எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து தெரியவரும் எனவும் மாணவனுக்கு மாநகருக்கு போதை ஊசி போட்டுக் கொள்ளும் பழக்கம் இருப்பதாகவும் தகவல் உள்ளது.

எனவே பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும் எனவும் தெரிவித்தார் மேலும் மாணவன் கிரி மீது கஞ்சா வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்கு இருப்பதாக உதவி ஆணையாளர் அசோகன் தெரிவித்தார்

சேலம் மாநகரில் போதை ஊசி போட்டுக் கொள்ளும் பழக்கம் மாணவர்களிடையே தற்போது அதிகரித்து வருகிறது குறிப்பாக சில நாயக்கன்பட்டி பகுதி முழுவதும் போதை மாத்திரை ஊசி உள்ளிட்டவைகள் மருந்து கடைகளில் அதிக அளவில் விற்கப்படுகிறது இது குறித்து காவல்துறை அதிகாரிகள் போதைப் பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்

பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன் இறப்பில் சந்தேகத்தின் அடிப்படையில் மாணவன் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

11 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

13 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

13 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

14 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

14 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

15 hours ago

This website uses cookies.