உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் இணை ஆணையராக பணிபுரிந்து வந்த செல்லத்துரை அண்மையில், மதுரை மண்டல இந்து அறநிலையத்துறையின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தக்காராக சுமார் 18 ஆண்டுகள் பதவி வகித்த கருமுத்து தி.கண்ணன் உடல்நலக்குறைவால் கடந்த மே மாதம் 23-ம் தேதி உயிரிழந்தார்.
அதற்குப் பின் இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் க.செல்லத்துரையை கோயில் தக்காராக நியமித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டது.
இந்நிலையில், அறநிலையத்துறையின் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களிடம், செல்லத்துரை பாலியல் ரீதியாக அத்துமீறி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தட்டிக்கேட்கும் பெண்களை சஸ்பெண்ட் செய்துவிடுவேன் எனக்கூறி செல்லத்துரை மிரட்டுவதாகவும் புகாரளிக்கப்பட்டுள்ளது.
உயர் அதிகாரிகள் ரகசிய விசாரணை செய்தால் மேலும் சில பெண்கள் வெளியில் வந்து புகாரளிப்பார்கள் எனவும் பரபரப்பு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
இந்து அறநிலையத்துறை ஆணையரிடமும், இந்து அறநிலையத்துறை விசாரணை கமிட்டியிடமும் புகார் செய்திருக்கும் பெண்கள், புகாரின் நகலை இந்து அறநிலையத்துறை அமைச்சருக்கும் அனுப்பி இருப்பதாக சொல்லப்படுகிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.