திருவள்ளூர் மாவட்டம் புழல் சிறையில் சிறைவாசிகளுக்கு விளையாட்டு பயிற்சிகளை தொடங்கி வைத்து காவலர்களுக்கு மின்மிதி வண்டிகளை வழங்கி நிகழ்வை கொடியசைத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
மேலும் சீரமைத்து விரிவாக்கப்பட்ட சிறை நூலகத்தை சட்டம் மற்றும் நீதி துறை அமைச்சர் எஸ் ரகுபதி அவர்களும் சிறைவாசிகளுக்கு இசைக்கருவிகளை பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் ஆகியோரும் இணைந்து வழங்கினர்.
பின்னர் கைப்பந்து விளையாட்டு போட்டியை விளையாடி துவக்கி வைத்த உதயநிதி ஸ்டாலின் சிறை நூலகத்தை சிறை துறை அதிகாரிகளுடன் பார்வையிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், நீண்ட ஆண்டுகளாக உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க சிறையில் மனுக்கள் அளித்துள்ளதாகவும் ஆளுநர் ஏற்கனவே முதல் முறை நிராகரித்து விட்டார் இரண்டாவது முறையாக ஆளுநர் வசம் தற்போது கோப்புகள் வைக்கப்பட்டுள்ளன என்றும் உரிய நடவடிக்கை எடுப்போம் எனவும் கூறினார்.
பின்னர் ஐடி ரெய்டு பற்றி பேசிய அவர் வருமான வரித்துறையினர் 2019 ஆம் ஆண்டு சோதனை நடத்தினார்கள். தற்போதும் நடத்துகின்றனர். சோதனை முடியட்டும் பார்க்கலாம். குற்றசாட்டுகள் வைத்தால் மட்டுமே அதுகுறித்து பதில் சொல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார்..
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.