அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை , தென்காசி , குமரி ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் நீடிப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேசியதாவது ;- அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 95 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அடுத்து வரும் இரண்டு தினங்களை பொறுத்தவரையில் தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
கனமழை குறித்து எச்சரிக்கை பொறுத்தவரையில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நீடிக்கிறது. மேலும், விருதுநகர், தேனி மாவட்டங்களில் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பகுதிகள் மற்றும் ராமநாதபுரத்தில் ஓர் இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
நாளை நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கன மழைக்கான வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரையில் குமரிக்கடல் மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடற்கரை பகுதிகளில் 40 முதல் 42 காற்று வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு 44 சென்டிமீட்டர். இந்த காலகட்டத்தின் சராசரி அளவு 42 சென்டிமீட்டர். இது ஐந்து சதவீதம் இயல்பை விட அதிகம். கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும் 33 இடங்களில் மிக கனமழையும் 12 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது, எனக் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.