3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… எந்தெந்த மாவட்டம்னு தெரியுமா..?
28 September 2020, 2:15 pmQuick Share
சென்னை : தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன.
இந்த நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் கடலூர், நீலகிரி, சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.