கரூர் ; கரூர் அருகே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அடுத்த சுக்காலியூர் பகுதியில் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான புதிய வீடு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த வீட்டில் புதிய கழிவு நீர் தொட்டியில் கட்டுமான பணி முடிந்து சவுக்கு மரங்களை பிரிப்பதற்காக இறங்கிய சென்ட்ரிங் தொழிலாளர் மோகன்ராஜ் மற்றும் பெயர் தெரியாத இளைஞர் ஒருவர் இறங்கினனர்.
அப்போது விஷ வாயு தாக்கி மயக்கமுற்று, அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்த சிவா என்பவர் இருவரையும் காப்பாற்ற சென்றுள்ளார். அப்போது, அவரையும் விஷவாயு தாக்கியது.
தற்போது மூன்று பேரும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், மருத்துவர்கள் பரிசோதித்ததில் மூவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடனே உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை உண்டாக்கியது.
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
This website uses cookies.