கரூர் ; கரூர் அருகே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அடுத்த சுக்காலியூர் பகுதியில் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான புதிய வீடு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த வீட்டில் புதிய கழிவு நீர் தொட்டியில் கட்டுமான பணி முடிந்து சவுக்கு மரங்களை பிரிப்பதற்காக இறங்கிய சென்ட்ரிங் தொழிலாளர் மோகன்ராஜ் மற்றும் பெயர் தெரியாத இளைஞர் ஒருவர் இறங்கினனர்.
அப்போது விஷ வாயு தாக்கி மயக்கமுற்று, அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்த சிவா என்பவர் இருவரையும் காப்பாற்ற சென்றுள்ளார். அப்போது, அவரையும் விஷவாயு தாக்கியது.
தற்போது மூன்று பேரும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், மருத்துவர்கள் பரிசோதித்ததில் மூவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடனே உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை உண்டாக்கியது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.