டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை, சிபிஐயால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
அவர் விடுதலையான பின், 48 மணி நேரத்திற்குள் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் என தெரிவித்திருந்தார்.
தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்காக துணைநிலை ஆளுநரிடம் நேரம் கேட்டிருந்தார். அவர் இன்று மாலை கெஜ்ரிவாலுக்கு நேரம் ஒதுக்கியுள்ளார்.
மேலும் படிக்க: கஞ்சா நகரமாக மாறுகிறதா கோவை? 8 மாதங்களில் 300 கிலோ.. இதுவரை 20 பேர் கைது : தீவிர சோதனையில் போலீஸ்!
இந்த நிலையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி சட்டமன்ற கட்சி தலைவராக யாரை தேர்ந்தெடுக்கலாம் என ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனை முடிவில் கெஜ்ரிவால், 14 துறைகளை கையில் வைத்திருக்கும் அதிஷி பெயரை பரிந்துரை செய்தார். அவர் பரிந்துரையை மற்ற எம்.எல்.ஏக்கள் ஏற்றுக் கொண்டனர்.
இதனால் அதிஷி அடுத்த முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவித்துள்ளன.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.