டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை, சிபிஐயால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
அவர் விடுதலையான பின், 48 மணி நேரத்திற்குள் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் என தெரிவித்திருந்தார்.
தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்காக துணைநிலை ஆளுநரிடம் நேரம் கேட்டிருந்தார். அவர் இன்று மாலை கெஜ்ரிவாலுக்கு நேரம் ஒதுக்கியுள்ளார்.
மேலும் படிக்க: கஞ்சா நகரமாக மாறுகிறதா கோவை? 8 மாதங்களில் 300 கிலோ.. இதுவரை 20 பேர் கைது : தீவிர சோதனையில் போலீஸ்!
இந்த நிலையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி சட்டமன்ற கட்சி தலைவராக யாரை தேர்ந்தெடுக்கலாம் என ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனை முடிவில் கெஜ்ரிவால், 14 துறைகளை கையில் வைத்திருக்கும் அதிஷி பெயரை பரிந்துரை செய்தார். அவர் பரிந்துரையை மற்ற எம்.எல்.ஏக்கள் ஏற்றுக் கொண்டனர்.
இதனால் அதிஷி அடுத்த முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவித்துள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.