சித்தா பட பாணியில் சாக்லேட் கொடுத்து 4 வயது சிறுமியை காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி மாவட்டம் வடைமாலை பேட்டை மண்டலம் அபிகண்ட்ரிகை கிராமத்தை சேர்ந்த மூன்றரை வயதை சிறுமியை பக்கத்தில் வீட்டில் வசிக்கும் 22 வயது வாலிபர் சுஷாந்த் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சாக்லேட் கொடுத்து அழைத்து சென்று அருகில் உள்ள வனப்பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் சிறுமையை கொலை செய்து உடலை புதைத்துவிட்டான்.
இதை அறியாத சிறுமியின் பெற்றோர் தங்கள் மகளைக் காணவில்லை என்று தேடி வந்தனர்.
இந்த நிலையில் சாக்லேட் கொடுத்து அந்த சிறுமியை சுசாந்த் அழைத்துச் சென்றதை அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பார்த்த நிலையில் அது பற்றி சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து சுசாந்தை பிடித்து தர்ம அடி கொடுத்து தீவிர விசாரணை நடத்திய போது அவன் சாக்லேட் கொடுத்து சிறுமியை கடத்திச் சென்று வனப்பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து உடலை புதைத்ததை ஒப்புக் கொண்டான்.
பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்து சேர்ந்த புத்தூர் போலீசார் சுசாந்தை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை தோண்டி எடுத்த போலீசார் பிரேத பரிசோதனைக்காக புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.