சித்தா பட பாணியில் சாக்லேட் கொடுத்து 4 வயது சிறுமியை காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி மாவட்டம் வடைமாலை பேட்டை மண்டலம் அபிகண்ட்ரிகை கிராமத்தை சேர்ந்த மூன்றரை வயதை சிறுமியை பக்கத்தில் வீட்டில் வசிக்கும் 22 வயது வாலிபர் சுஷாந்த் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சாக்லேட் கொடுத்து அழைத்து சென்று அருகில் உள்ள வனப்பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் சிறுமையை கொலை செய்து உடலை புதைத்துவிட்டான்.
இதை அறியாத சிறுமியின் பெற்றோர் தங்கள் மகளைக் காணவில்லை என்று தேடி வந்தனர்.
இந்த நிலையில் சாக்லேட் கொடுத்து அந்த சிறுமியை சுசாந்த் அழைத்துச் சென்றதை அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பார்த்த நிலையில் அது பற்றி சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து சுசாந்தை பிடித்து தர்ம அடி கொடுத்து தீவிர விசாரணை நடத்திய போது அவன் சாக்லேட் கொடுத்து சிறுமியை கடத்திச் சென்று வனப்பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து உடலை புதைத்ததை ஒப்புக் கொண்டான்.
பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்து சேர்ந்த புத்தூர் போலீசார் சுசாந்தை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை தோண்டி எடுத்த போலீசார் பிரேத பரிசோதனைக்காக புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.