பாதிப்பு பதிவு செய்யாத 6 மாவட்டங்கள்…. தலைநகரம் மட்டுமே டாப் : தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 February 2022, 8:13 pm
Corona Cbe - Updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் இன்று 439 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ள நிலையில், 2ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தில் தற்போது கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 439 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் இன்று ஒருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38,003 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,209 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,04,611 ஆக உள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 119 பேருக்கும், கோவையில் 66 பேருக்கும், செங்கல்பட்டில் 51 பேருக்கும், ஈரோட்டில் 16 பேருக்கும், திருப்பூரில் 16 பேருக்கும், சேலத்தில் 11 பேருக்கும், திருவள்ளூரில் 18 பேருக்கும், திருச்சியில் 11 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 17 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய தொற்று எதுவும் பதிவாக வில்லை.

Views: - 653

0

0