ராணி மேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூருக்கு 7 அடி உயரச் சிலை : முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!!!
இந்தியாவின் தேசிய கீதத்தை இயற்றிய கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் நினைவைப் போற்றும் வகையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் சென்னை ராணி மேரி கல்லூரி வளாகத்தில் அவரது முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை 7 அடி உயரத்தில் ரூ.29.7 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில், சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கான ‘வீரா’ என்ற அவசர மீட்பு வாகனத்தின் பயன்பாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதன் பிறகு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ரூ.7.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகளை திறந்து வைத்த முதலமைச்சர், திருப்பூர், திருப்பத்தூர் அகிய மாவட்டங்களில் கட்டப்பட உள்ள கிடங்குகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணிக்காலத்தில் உயிரிழந்த 53 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமண ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.