ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாளில் 2 சதவீதம் பட்டதாரி ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறாத சம்பவம் பெற்றோர் மற்றும் கல்வி ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வின் 2ம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், கடந்த பிப்ரவரி மாதம் ஆசிரியர் தகுதி தேர்வின் 2ம் தாள் தேர்வு நடைபெற்றது.
இந்தத் தேர்வின் முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்தம் 4,01,986 பேர் பதிவு செய்திருந்த நிலையில், 2.54 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் 2.50 லட்சம் பேரில் 20 ஆயிரத்திற்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசிரியர் தகுதி தேர்வில் 98 சதவீதம் பட்டதாரி ஆசிரியர்கள் தோல்வி அடைந்திருப்பது கல்வியின் தரத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளதாக கல்வி ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆணித்தரமான கருத்துக்களை காமெடி மூலமாக கொண்டு…
கமல்ஹாசனா இப்படி செய்தது? தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் இன்னும் அவரது ரசிகர்களின் மனதில் உலக நாயகனாகவே…
பொதுவெளியில் பிரபலங்களுக்கு திடீரென சங்கடங்கள் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் ஒரு சிலர் அணிந்து வரும் ஆடையும் அப்படி சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது.…
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
This website uses cookies.