சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்த நாள் முன்னிட்டு அத்தொகுதி சார்பாக மாபெரும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், உதயநிதியின் பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதிலும் பெரிய அளவில் அமர்க்களம் ஆரவாரம் ஏதும் இல்லாமல் ஏழை மக்கள் பயன்படுகிற வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளாக நடத்த அறிவுறுத்தப்பட்டு இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
அடுத்த பிறந்தநாளில் அமைச்சராக உதயநிதி பிறந்தநாள் கொண்டாடுவது நடந்தால் நல்லது, அனைவரும் மிக மகிழ்ச்சி அடைவோம். அமைச்சராகவதற்கான எல்லா தகுதிகளையும் உடையவர் உதயநிதி எனவும் கூறினார்.
திமுக இளைஞர் அணி அமைப்பு என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடித்தளம். ஏறத்தாழ 30 லட்சம் இளைஞர்கள் இந்த அணியில் உள்ளடங்கி இருக்கிறார்கள். திமுக இளைஞரணி சம்பிரதாயத்திற்கான அமைப்பு அல்ல எனவும் சமூகத்திற்கான அமைப்பு எனவும் 1980 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திமுக இளைஞரணி கிட்டத்தட்ட 40 ஆண்டுகளை கடந்து சென்று கொண்டிருப்பதாக கூறினார்.
10 லட்சம் இளைஞர்களை உள்ளடக்கி இருக்கிற உயிரோட்டமான அமைப்பு இது, நல்ல தலைவராக உதயநிதி இருப்பதால் அவர் எல்லா தகுதிகளுக்கும் ஏற்புடையவர் என கூறினார்.
இதே போல, உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தண்டையார்பேட்டையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,” இளைஞரணி நிகழ்ச்சி என்றாலே அதில் ஒரு எழுச்சி என்றும் இருக்கும். தமிழ்நாடு முழுவதும் எத்தனையோ நிகழ்ச்சிகள் இன்று நடக்கிறது என்றாலும் இந்த நிகழ்ச்சி நடப்பதை கேட்டு உதயநிதி நெகிழ்ந்தார். திராவிட இயக்கத்தின் முதுகெலும்பு இளைஞரணி தான். இன்றைய இளைஞரணி செயலாளர் நாளை கழக(திமுக) தலைவராக வருவதற்கு தட்டியம் (அடிதளம்) போடுகின்ற நிகழ்வாக தான் இன்று தமிழ்நாடு முழுவதும் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது
சின்னவருக்கு வெடி வைத்தால் புடிக்காது..எனக்கு சிறியதாக உதவிகள் செய்தாலும் மக்களுக்கு பயன்படுகிற வகையில் செய்ய வேண்டும் என கூறி இருக்கிறார் உதயநிதி.
இளைஞரணி செயலாளராக எளிதில் உதயநிதி வரவில்லை.. 2019 தேர்தல் வெற்றிக்கு என்னை விட தொண்டர்களும் தலைவரும் தான் காரணம் என பெருமிதத்துடன் கூறியவர் நமது சின்னவர். அவர் இன்னும் மேலும் பல உயரங்களை தொட வேண்டும்.
இந்த பிறந்தநாளில் அவர் சட்ட மன்ற உறுப்பினராக இருக்கிறார். அடுத்த பிறந்தநாளில் அவர் அமைச்சராக இருக்க வேண்டும் என அனைவரின் ஒத்த கருத்தாக அவரை வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறேன்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள், நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இரத்ததான முகாம்,அன்னதானம் நலத்திட்ட உதவிகள் என எதுவாக இருந்தாலும் மக்களுக்கு வேண்டியதை செய்ய வேண்டும் என்ற உதயநிதியின் அன்பு கட்டளையை ஏற்று தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
This website uses cookies.