வேலூர் : முதலமைச்சர் ஸ்டாலின் செல்லும் வழியில் முதலமைச்சருக்கு சிறுமி பேனா வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியது.
வேலூர் மாவட்டம் காட்பாடி வஞ்சூர் பகுதியை சேர்ந்த 4ம் வகுப்பு படிக்கும் 10 வயது மாணவி S.யாழினி, முதலமைச்சர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு முடித்து வெளியே வரும்போது, முதல்வருக்கு பேனா கொடுத்துள்ளார். வாகனத்தின் அருகே அழைத்து பேனாவை வாங்கிய முதல்வர் பள்ளி மாணவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த பேனாவை கலைஞர் சமாதியில் வைக்க வேண்டுமென சிறுமி ஆசைபட்டுள்ளார். இதனைக் கேட்ட முதல்வர் சிறுமியின் ஆசையை கண்டிப்பாக நிறைவேற்றுகிறேன் என கூறி அனுப்பியுள்ளார்.
இது குறித்து சிறுமி கூறுகையில், “முதல்வரை பார்த்தது எனக்கு சந்தோஷமா இருந்தது, என்னை நன்றாக படிக்கச்சொன்னார், நான் முதல்வரை பார்ப்பேன்னு எதிர்பார்க்கலை,” என கூறினார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.