காஞ்சிபுரம் ; தன் மகனுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காததால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் தன் மகனுக்கு ஜாதி சான்றிதழ் வாங்க கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் என பல தரப்பட்ட அரசு அலுவலகத்தில் முயற்சித்தும், கடைசி வரை அவருடைய மகனுக்கு ஜாதி சான்றிதழ் வாங்க இயலவில்லை.
ஜாதி சான்றிதழ் வாங்க முடியாத காரணத்தினால், மனம் வெறுத்துபோய் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்ட மையம் அருகே உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தீ வைத்துக் கொண்டதில் அவருடைய துணிமணி எல்லாம் எரிந்து உடல் வெந்து போன நிலையில் வேல்முருகன் 60 சதவீத படுகாயத்துடன் மீட்க்கப்பட்டு கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேல்முருகன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் உயர் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.