சாலையில் படுத்துக்கிடந்த மலைப்பாம்பை, அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் அசால்ட்டாக தூக்கி ஓரத்தில் வீசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாக, வனங்கள் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் மனித – விலங்கு மோதல் அதிகமான ஒன்றாக இருந்து வருகிறது. இதனை தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இருப்பினும், விலங்குகளால் மனிதர்களுக்கும், மனிதர்களால் விலங்குகளுக்கும் உயிர்ச்சேதம் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டிய மனிதர்களே, அதனை சித்ரவதைப்படுத்துவதும், கொன்று எறிவதும் அடிக்கடி வலைதளங்களில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
இப்படியிருக்கையில், தற்போது சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அது எங்கு நடந்தது..? எப்போது நடந்தது..? என்று தெரியாத நிலையில், வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது நெட்டிசன்களிடையே கொதிப்படைய செய்துள்ளது.
சாலையில் படுத்துக்கிடந்த மலைப்பாம்பை, அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் அசால்ட்டாக தூக்கி ஓரத்தில் வீசுகிறார். இதனை பார்க்கும் நெட்டிசன்கள் இவ்வளவு அலட்சியமா..? என திட்டித் தீர்த்தாலும், ஒரு சிலரோ, வாகனங்களில் அடிபடக் கூடாது என்பதற்காக அவர் இதை செய்திருக்கலாம் என்று ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
This website uses cookies.