குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 கொடுப்பது தொடர்பான தேர்தல் வாக்குறுதி குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா அதிரடியாக பேசியுள்ளார்.
சென்னையில் திமுகவின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்றது. திமுகவைச் சேர்ந்த பல நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பங்கேற்று பேசினார்.
அவர் பேசியதாவது :- ஆட்சிக்கு வந்தால் நீட்டை ரத்து செய்வேன் என்று ஸ்டாலின் சொன்னாரே என்று எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் ஆகியோர் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். நீட் மசோதாவை தமிழக ஆளுநர் நிராகரித்தார். மீண்டும் அதை தமிழக ஆளுநருக்கு முதல்வர் அனுப்பி வைத்தார். இந்த நிலையில், ஆளுநர் வைத்த தேநீர் விருந்தை புறக்கணித்து முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை பணிய வைத்தார். குடியரசுத் தலைவருக்கு மசோதாவை முதல்வர் அனுப்ப வைத்திருக்கிறார். இதுதான் திராவிட மாடலுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.
அதேபோல, பெண்களுக்கு உரிமைத் தொகை எப்போது தருவீர்கள்..? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஐந்து ஆண்டு கழித்து தேர்தல் நடக்கும்போது திமுக தேர்தல் அறிக்கையை கையில் வைத்துக் கொண்டு, ‘முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு ரூ.1000 தருகிறேன் என்று சொன்னார். ஆனால், தரவில்லை. அதனால் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று எடப்பாடி கேட்கட்டும். அப்போது நானே இரட்டை இலைக்கு வாக்களிக்கிறேன், எனக் கூறினார்.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
This website uses cookies.