பாஜக முன்னாள் நிர்வாகியான எஸ்.வி. சேகர் தற்போதைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் தொடர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், எஸ்.வி. சேகர் புதிய கட்சித் தொடங்கப்படும் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் எஸ்.வி. சேகர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது, உங்களுக்கு முன்செய்தியாக ஒன்று சொல்கிறேன். தமிழ்நாட்டில் விரைவில் பிராமணர்களுக்கான கட்சி தொடங்கப்படும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 33 தொகுதிகளில் பிராமணர்கள் வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள். அவர்களுக்கு பிராமணர்கள் மட்டும் வாக்களித்தால் போதும் என்று கூறினார்.
எங்கள் நோக்கம் வெற்றி அல்ல. பிராமணர்களின் வாக்குகளை ஒன்றிணைத்து, பிராமணர்களின் பலத்தை நிரூபிப்பதுதான். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் மற்ற கட்சிகள் வருங்காலத்தில் பிராமணர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கும் என்றும் சேகர் சொன்னார்.
புதிய கட்சித் தொடங்க பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்தான் உத்வேகம் அளித்தார் என்றும் சேகர் தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சேகர், பிராமணர்கள் என்றவுடன் டிவிஎஸ் ஐயங்கார், எஸ்வி சேகர், சோ போன்றவர்களையே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், பிராமணர்களில் பலரும் ஏழ்மை நிலையில் உள்ளனர் என்று கூறினார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.