தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஆவின் பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது. அதன்படி 500 மி.லி. ஆரஞ்ச் பால் பாக்கெட் 24 ரூபாய்க்கும் பச்சை நிற பாக்கெட் 22 ரூபாய்க்கும் நீல நிற பாக்கெட் 20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
ஆவின் பால் அட்டைதாரர்களுக்கு ஆரஞ்ச் மற்றும் பச்சை நிற பாக்கெட்டில் ஒரு ரூபாயும் நீல நிற பாக்கெட்டில் 1.50 ரூபாயும் குறைத்து வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக 15 நாட்களுக்கு ஒருமுறை பால் அட்டை பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. பால் விலை குறைப்பால் ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் திணறுகிறது.
தனியார் பால் விலை மூன்று முறை உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் ஆவினுக்கு பால் வழங்கும் விவசாயிகள் கூடுதல் கொள்முதல் விலையை எதிர்பார்க்கின்றனர்.
ஆவின் நஷ்டத்தை தவிர்க்கும் வகையில் தற்போது சிவப்பு நிற பால் பாக்கெட் விற்பனை துவங்கப்பட்டு உள்ளது. இது 500 மி.லி. 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த பால் விற்பனை அதிகரிப்பதன் வாயிலாக ஆவின் நஷ்டத்தை வெகுவாக குறைக்க முடியும்.
எனவே ஆரஞ்ச் பால் விற்பனையை குறைத்து சிவப்பு நிற பால் பாக்கெட் விற்பனையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பின் ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் தயாரிப்பு 80 சதவீதம் அளவிற்கு குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னோட்டமாக ஆரஞ்ச் நிற பால் அட்டை விற்பனையை தவிர்த்து சிவப்பு நிற பால் அட்டையை அதிகளவில் பொது மக்களுக்கு வினியோகம் செய்ய ஆவின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அக்., 15ம் தேதி முதல் இதை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் கூடுதல் விலை கொடுத்து பால் வாங்க வேண்டிய நிர்பந்தம் ஆவின் நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ளது. தி.மு.க. தேர்தல் வாக்குறுதியும் கேள்விக்குறியாகி உள்ளது.
பொதுவாக நீல நிற பாக்கெட்டில் 3% கொழுப்பு சத்தும், 8.5% இதர சத்துக்கள் உள்ளன, பச்சை நிற பால் பாக்கெட்டில் 4.5% கொழுப்பு சத்தும், 8.5% இதர சத்துகள் உள்ளன.
ஆரஞ்சு நிற பாக்கெட்டில் 6% கொழுப்பு சத்தும், 9% இதர சத்துக்களும் உள்ளன. ஆவின் நிறுவனம் வாயிலாக ஒரு லிட்டர் பசும் பால், 32 ரூபாய்க்கும், எருமை பால் 41 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதில் இருந்து கொழுப்பு உள்ளிட்ட சத்துக்கள் பிரித்து எடுக்கப்பட்டு, வெண்ணெய், நெய், பால் பவுடர் தயாரிக்கப்படுகின்றன. நீலம் மற்றும் பச்சை நிற பாக்கெட்டில், அதிகளவில் சத்துக்கள் பிரித்தெடுத்து விற்பனை செய்வதால் ஆவின் நிறுவனத்திற்கு லாபம் கிடைக்கிறது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை, இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டது. கொள்முதல் இழப்பு, சத்துக்கள் அதிகளவில் பிரிக்காதது, உற்பத்தி செலவு, வாகன வாடகை உள்ளிட்டவை காரணமாக, ஆரஞ்ச் பால் விற்பனையால், ஆவின் நிறுவனத்திற்கு லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது.
அதேநேரத்தில், சிவப்பு நிற பால் பாக்கெட் விற்பனை வாயிலாக, லிட்டருக்கு எட்டு முதல் 10 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. எனவே, ஆரஞ்ச் பால் விற்பனையை குறைத்து, சிவப்பு நிற பால் பாக்கெட் விற்பனையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆரஞ்ச் பாலுக்கு தனி நுகர்வோர் உள்ளனர். இவர்களை சிவப்பு நிற பால் பாக்கெட்டை வாங்கவைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.