அபுதாபி அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு : தமிழகத்துடனான வர்த்தகம் பற்றி பேசியதாக தகவல்

Author: Babu Lakshmanan
28 March 2022, 12:25 pm
Quick Share

அபுதாபியில் அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

4 நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் மற்றும் அபுதாபி சென்றுள்ளார். முதற்கட்டமாக துபாய் சென்ற அவர், அங்குள்ள உலக கண்காட்சியில் தமிழக அரங்கினை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, துபாய் அமைச்சர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான சூழலை எடுத்துக் கூறி, தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

பின்னர், அங்குள்ள முதலீட்டாளர்களை சந்தித்து பேசி அவர்களுக்கும் அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து, ரூ.2,600 கோடியிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் ஸ்டாலினின் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

துபாய் பயணத்தை முடித்துக் கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் அபுதாபிக்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, தமிழகம் – அபுதாபி இடையே உள்ள வர்த்தகம் குறித்தும், அந்நாட்டில் உள்ள தமிழர்கள் நலன் குறித்தும் பேசியதாக தெரிகிறது.

Views: - 672

0

0