சௌமியா அன்புமணி எடுத்த அதிரடி முடிவு : முதலமைச்சர் வரை முறையிட திட்டம்!!!

கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் கூட்டரங்கில் பசுமை தாயகம் அமைப்பு சார்பில் “நொய்யலாறு” மீட்பிற்கான கருத்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இதில் பசுமை தாயகத்தின் தலைவரும், அன்புமணி ராமதாஸின் மனைவியுமான சவுமியா அன்புமணி கலந்து கொண்டு விவசாயிகள், தொழிற்துறையினர், சமூக, சுற்றுச்சூழல், வன ஆர்வலர்கள் மற்றும் குளங்கள் பாதுகாப்பு குழுக்களுடன் கலந்துரையாடினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சவுமியா அன்புமணி, கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்ற பழமொழியை கூறி, நொய்யல் ஆற்றை மையபடுத்தி உழைத்து கொண்டிருக்கும் அனைத்து நல் உள்ளங்களையும் இணைத்து பசுமை தாயகம் சார்பில் ஒரு கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இருக்கிறோம் என்றார்.

இந்த நொய்யல் ஆற்றை காப்போம், நொய்யல் ஆற்றை மீட்பதற்காக நடத்தபட்ட கூட்டத்தில் நிறைய பேர் கலந்து கொண்டு ஆர்வமுடன் நிறைய கருத்துகளை எடுத்துக் கூறியிருப்பதாக தெரிவித்தார்.

நொய்யல் ஆற்றை தூய்மைப்படுத்தி மீட்க மாவட்ட வாரியகாவோ அல்லது தாலுக்கா வாரியாகவோ, ஒற்றுமையான ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றார்.

குறைந்த செயல்திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றவர் முதல் கட்டம், இரண்டாம் கட்டம் ,மூன்றாம் கட்டம் என பல நிலைகளில் இப்பணிகளை எடுத்துச் செல்ல வேண்டும் என நினைப்பதாக தெரிவித்தார்.

நொய்யலாற்றை மீட்க பத்து லட்சம் கையெழுத்துடன் ஒரு கையெழுத்து இயக்கத்தை நடத்தலாம் என்ற முடிவு செய்யபட்டுள்ளதாக சவுமியா அன்புமணி கூறினார்.,

மாணவர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த குறைந்தபட்ச செயல்திட்டம் தயாரிப்பது குறித்து பேசிக்கொண்டிருப்பதாக கூறிய அவர், இந்த நொய்யலாறு பிரச்சனையை மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள், முதலமைச்சர் வரை அவர்களது கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

நொய்யல் ஆற்றை மீட்க மாதம் ஒரு கூடி என்னென்ன செய்யலாம் என பேச யோசித்து வைத்திருப்பதாகவும், அரசியல் கட்சிகளில் யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கிறதோ அவர்களெல்லாம் ஒன்றிணைந்து செயல்பட முயற்சி செய்து வருவதாக கூறினார்.

இன்று சமூக அமைப்புகள் மட்டும் தான் ஒன்றிணைந்திருக்கறோம் என்றும் விரைவில் அரசியல் கட்சிகளை சந்திப்போம் என்றார். தாங்கள் எந்த விஷயத்தை எடுத்தாலும் அதை நல்ல முறையில் முடித்து காட்டுவோம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த கூட்டத்தை கூட்டி நொய்யல் ஆற்றை பற்றி விரிவாக விவாதித்திருப்பதாக தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

2 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

2 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

2 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

3 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

4 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

4 hours ago

This website uses cookies.