பாஜக தனித்து போட்டியிட்டதில் தப்பில்லை எங்களுக்கு தைரியம் இருந்ததால் தேர்தலில் தனித்து போட்டியிட்டதாகவும், மக்களிடம் பாஜகவிற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக நடிகை குஷ்பு தெரிவித்தார்.
சென்னை மயிலாப்பூர் தொகுதி 126வது வார்டு மந்தைவெளி பகுதியில் உள்ள ஸ்ரீ ராஜலட்சுமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அமைப்பாளரும், நடிகையுமான குஷ்பூ சுந்தர் தனது வாக்கினை பதிவு செய்தார். அதனையடுத்து, பொதுமக்கள் குஷ்பு உடன், புகைப்படம் எடுத்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஷ்பு கூறியதாவது :- வாக்களிப்பது அனைவரின் ஜனநாயக கடமை. வாக்களிக்காமல் வீட்டில் இருந்து கொண்டு இருந்து குறை சொல்லக்கூடாது. மக்கள் வெளியே வந்து, 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தல் உள்ளாட்சித் தேர்தல் பாராளுமன்றத் தேர்தல் என எதையும் பாராமல் மக்கள் அனைவரும் கண்டிப்பாக ஜனநாயக ரீதியாக தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
நான் எனது ஓட்டினை செலுத்தி விட்டேன்.எனவே மக்கள் வீட்டுக்குள்ளே இல்லாமல் கண்டிப்பாக வெளியே வந்து மக்களுக்கு யார் நல்லது செய்வார்கள் என்பதை அவர்கள் சிந்தித்து அவர்களுடைய வாக்கினை செலுத்த வேண்டும். பாஜக தனித்து போட்டியிடுவதில் தப்பில்லை எங்களுக்கு தைரியம் இருந்ததால் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம் வெற்றி வாய்ப்பை பற்றி தற்பொழுது பேச முடியாது.
தமிழகத்தில் பாஜகவிற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. நோட்டாவோடு பாஜகவை ஒப்பிட்டு பார்த்து கொண்டு இருக்கும் வேலையில் 4 பேர் சட்டசபைக்கு சென்று வீட்டார்கள். காலம் மாறி வருகிறது. மக்களை சோம்பேறி ஆக்குவதற்கு பணம், டிவி, மின்விசிறி, கொலுசு கொடுக்கிறார்கள். மக்களுக்கு கல்வி, தண்ணீர், வீடு, பெண்களுக்கு பாதுகாப்பு, அனைவருக்கும் தொழில் இதுதான் வேண்டும், என்றார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.