அப்பாடி… ஒரு வழியா கிடச்சுது ஜாமீன்… பட்டியலின இயக்குநர்களை இழிவுபடுத்திய வழக்கில் நடிகை மீரா மிதுன் எஸ்கேப்..!!
Author: Babu Lakshmanan26 August 2021, 4:20 pm
சென்னை: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில்வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 11ம் தேதி மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த 14ம் தேதி கைது செய்யப்பட்டனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், தங்களுக்கு ஜாமின் வழங்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்கள் இருவரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால், ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, மீரா மிதுனை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம், நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கியதுடன், போலீசார் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
0
0