தேனிசைத் தென்றல் என அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா நேற்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடினார். பல்வேறு நடிகர்களுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்த தேவா, அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் என ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், சூப்பார் ஸ்டார் என்ற ஸ்லோகனுக்கு மாஸ் பிஜிஎம் கம்போஸ் செய்தவரும் இவர்தான்.
இந்த நிலையில், ‘தேவா தி தேவா’ என்ற இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த இசைக் கொண்டாட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, மீனா, மாளவிகா உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் தேவாவின் சூப்பர் ஹிட் பாடல்கள் இசைக்கப்பட்டன. பாட்ஷா படத்தின் பிஜிஎம் இசைக்க, தேவா குறித்து பேசுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் மேடையேறினார். இதனை பார்த்த ரசிகர்களால் அரங்கமே அதிர்ந்தது.
பின்னர், மேடையில் பேசிய ரஜினிகாந்த், வைரமுத்து எழுதி தேவா இசையமைத்த பாடலான ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடல் குறித்த ரகசியத்தை வெளிப்படுத்தினார்.
அவர் பேசியதாவது ;- சிங்கப்பூர் அதிபராக இருந்த நாதன் தமிழராக பிறந்து மலேசியாவில் வாழ்ந்தவர். அவர் இறப்பதற்கு முன் அவருடயை உயிலில் கடைசி ஆசையாக, பொற்காலம் படத்தில் இடம்பெற்ற ‘தஞ்சாவூரு மண்ணு’ பாடல் தனக்கு மிகவும் பிடிக்கும். தான் இறந்த பிறகு அந்தப் பாடலை ஒலிக்க விட்டு, எனது உடலை எடுத்துச்செல்ல வேண்டும் எனக் கூறியிருந்தார்.
அவரது விருப்பத்தை ஏற்று, நாதன் உயிரிழந்தபின் அவரது இறுதி ஊர்வலத்திற்கு முன்னர் உலகத் தலைவர்கள் முன்னிலையில் அந்தப் பாடல் ஒலிக்கப்பட்டது. தஞ்சாவூர் மண்ணு பாடலுக்கு இசையமைத்தவர் நம்ம தேவா தான். சிங்கப்பூர், மலேசியா, தாய்லாய்ந்து, ஹாங்காங் உட்பட பல நாடுகளில் அந்தப் பாடலை மொழிப் பெயர்த்து பத்திரிக்கையில் விளக்கியிருந்தனர்.
ஆனால், எந்த தமிழ் ஊடகங்களும் அதுகுறித்து எழுதவில்லை. இதனால் தேவாவின் மனது எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும். தயவுசெய்து இதுபோன்ற விஷயங்களை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் வெளிவுலகிற்கு சொல்ல வேண்டும், என வேண்டுகோள் விடுத்தார். அவரது இந்த பேச்சு வைரலாகி வருகிறது.
இதனிடையே, சிங்கப்பூரில் நாதன் உயிரிழந்த பிறகு தஞ்சாவூரு மண்ணு பாடல் ஒலிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.