நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்போவதாக வெளியான தகவலுக்கு விஜய் மக்கள் இயக்கம் பதில் அளித்துள்ளது.
2019 மற்றும் 2021ல் நடந்த தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்தே அதிமுக போட்டியிட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக போட்டியிட்ட தேர்தல்களில் எதிர்பார்தத வெற்றி கிடைக்கவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், பாஜகவுடன் கூட்டணி வைத்ததும் ஒரு காரணமாக சொல்லப்பட்டு வந்தது.
இருப்பினும், பாஜக கூட்டணியில் அதிமுக நீடித்து வந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால் இரு கட்சியினரிடையே மோதல் போக்கு ஏற்பட்டது. ஜெயலலிதா, அண்ணா குறித்து அவர் பேசியது அதிமுகவினரிடையே பொறுமையை இழக்கச் செய்தது. இதனால், பகிரங்கமாக வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இருப்பினும், தன்னுடைய கருத்தில் இருந்து அண்ணாமலை பின்வாங்கவில்லை.
ஒருகட்டத்தில் பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது என்று அதிமுக அறிவிப்பை வெளியிட்டது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2024ல் மட்டுமல்ல 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதைத் தொடர்ந்து, அதிமுகவுடன் சமரசம் செய்ய பாஜக எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், எதுவும் கைகொடுக்கவில்லை.
இதைத் தொடர்ந்து, அதிமுகவும், பாஜகவும் கூட்டணியை பலப்படுத்துவதற்கான முயற்சிகளில் தனித்தனியே ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளை தக்க வைத்துக் கொள்ள பாஜக காய் நகர்த்தி வருகிறது.
இந்த நிலையில், அடுத்த நடைபெற இருக்கும் சட்டப்பேரவையில் போட்டியிட நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை தயார் செய்து வருகிறார். இந்த சூழலில், அவர் பாஜகவுடன் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது X தளத்தில் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- இன்றைய தினமலர் நாளிதழில் நடிகர் விஜய் அவர்களது பெயரை இரண்டு அரசியல் கட்சிகளோடு அவ்வாறு தொடர்புபடுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு வெளியிடப்படுள்ள செய்தி எள்ளளவும் அறமற்ற பொய்யான செய்தி.
நடிகர் விஜய் அவர்களது பெயரை உள்நோக்கத்தோடு அவரது அரசியல் நிலைப்பாடு என்று தொடர்புபடுத்தி துளியும் உண்மையில்லாத தகவல்களை கொண்டு தினமலர் நாளிதழில் வெளியாகியுள்ள இந்த பொய்யான செய்திக்கு நடிகர் விஜய் அவர்கள் சார்பாக அதிகாரப்பூர்வமாக மறுப்பை தெரிவித்துக்கொள்கிறேன்.!, எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.