நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்ததற்கு அநாகரீகமான முறையில் விமர்சித்த நபருக்கு நடிகை கஸ்தூரி கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த 2ம் தேதி தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை தொடங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்த அவர், 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை நோக்கி செயல்பட இருப்பதாகவும் கூறினார்.
மேலும், தான் ஒப்பந்தம் செய்த படங்களை நடித்து முடித்துக் கொடுத்து விட்டு, இனி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளார். நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பல்வேறு தரப்பினரும் வரவேற்பையும், கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், சமூக ஆர்வலரும், நடிகையுமான கஸ்தூரி நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து கருத்து தெரிவித்திருந்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், தளபதி விஜய் அவர்களுடைய அரசியல் வருகை எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும், காவி கொள்கை உள்ளவர்கள் பாஜகவிற்கு தான் ஓட்டு போடுவார்கள், அவர்கள் ஜோசப் விஜய்க்கு ஓட்டு போட மாட்டார்கள் என்றும் கூறினார். அதேபோல மைனாரிட்டி மக்கள் திமுகவுக்கு தான் ஓட்டு போடுவார்கள் என்று சில விஷயங்களை பேசி இருந்தார். இதில் அவர் ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டு பேசியது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக X தளவாசி ஒருவர் அவருடைய அந்த கருத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தார். ஜோசப் விஜய் என்றா சொல்வது… உனக்கெல்லாம் மதத்தை தவிர்த்து வேறு எதுவும் தெரியாதா..? என்று அவர் அநாகரீக வார்த்தைகளுடன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதத்தில் பேசியிருந்த கஸ்தூரி அவர்கள் “விஜய்யை ஜோஸப் என குறிப்பிடும் கட்சியினர் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற அரசியல் உண்மையை சொல்லியிருக்கேன். என் சொந்த கருத்தை அல்ல. திமுக கூட்டணிக்கு பாதிப்புன்னு சொன்ன உடனே உ.பி கழிசடைங்க எப்படியெல்லாம் மூட்டி விடுதுங்க பாரேன். பொய்யை மட்டும் தான் பேசுவீங்களாடா?” என்று கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.