நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்தது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையில் தொற்று பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானார்.
மீனா கணவரின் இரங்கல் செய்தியைக் கேட்ட திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர், அவரது வீட்டுக்கு நேரில் சென்றும், சமூக வலைதளங்களின் மூலமும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, மீனாவின் கணவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் கூறப்பட்டு வந்தது. ஆனால், இதற்கு மீனாவின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதேவேளையில், புறாவின் எச்சம் கலந்த காற்றை சுவாசித்ததால், அவரது நுரையீரலில் தொற்று ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில், கொரோனாவால் வித்யாசாகர் உயிரிழந்ததாக கூறப்படும் தகவலுக்கு நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது :- சற்று பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் என ஊடகத்தினரைக் கேட்டுக்கொள்கின்றேன். மீனாவின் கணவர் 3 மாதங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
கொரோனா அவரது நுரையீரலை வெகுவாக பாதித்தது. தயவு செய்து அவர் கொரோனாவால் இறந்ததாக தவறான தகவலை பரப்பி, மக்களை அச்சமுறுத்தாதீர்கள். நம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்தான். ஆனால் தயவு செய்து அச்சுறுத்தாதீர்கள், எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்தது குறித்த கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- நடிகை மீனாவின் கணவர் இருதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்த நிலையில் கடந்த 6 மாதமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
உறுப்புதானம் பெற முதலமைச்சரின் அறிவுறுத்தலோடு, பலவிதமான முயற்சிகள் மேற்கொண்டும் துரதிருஷ்டவசமாக அவர் இறந்துவிட்டார், எனக் கூறினார்.
அமைச்சரின் இந்த விளக்கத்தின் மூலம், கொரோனா தொற்றினால் மீனாவின் கணவர் உயிரிழக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.