தஞ்சை : பேருந்துகளில் பெண்கள் ஓசி பயணம் மேற்கொள்வதாக கூறிய அமைச்சர் பொன்முடிக்கு நடிகை கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார்.
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்துக்கு நேற்று வந்த நடிகை கஸ்துாரி, மாநகராட்சியின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாகக் கூறி மேயர் ராமநாதன் மற்றும் ஆணையர் சரவணக்குமாரை சந்தித்து பாராட்டினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் பெண்களின் சுதந்திரத்தை மேம்படுத்தும் நல்ல திட்டம். அரசு, எந்த திட்டத்தையும் அவர்களின் சொந்த பணத்தில் செய்யவில்லை. மக்களின் வரிப்பணத்தில் தான் நிறைவேற்றி வருகிறது. மக்களுக்கு ஒரு திட்டத்தைச் செய்து விட்டு, அதை சுட்டிக்காட்டுவது மிக பெரிய தவறு. ‘ஓசி பஸ்’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியது, அதை விட பெரிய தவறு.
அமைச்சர் பொன்முடி, அப்படி பேசியதை நியாயப்படுத்த முடியாது.’ஓசி பஸ்’ என பெண்களை கூறும் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் முதல் அனைத்து ஆண்களும், பெண் வயிற்றில், ‘ஓசி’யில் பிறந்தவர்கள் தான். பெண்களுக்கான மரியாதையை அனைவரும் கொடுக்க வேண்டும். பெண்களை மதிக்கும் வகையில் தான், அமைச்சர்கள் பேச வேண்டும்.
ஒரு செயலை எதிர்க்க எதிர்க்க அது வளரும் என்பார்கள். அப்படித்தான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தமிழகத்தில் திமுக எதிர்த்து எதிர்த்தே வளர்த்து விடுகிறது. ஆர்எஸ்எஸ் என்ற மூன்றெழுத்தை திமுக என்ற மூன்றெழுத்து தான் வளர்த்து வருகிறது. முதல்வர் முக ஸ்டாலின் மேயராக இருந்தபோது சிறப்பாகச் செயல்பட்டார். ஆனால் தற்போது எதிர்பார்த்த அளவுக்கு அவரது செயல்பாடுகள் இல்லை. இருந்தாலும் பாராட்டும்படி அவர் செயல்படுகிறார், என தெரிவித்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.