ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை விந்தியா ஈரோட்டில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் கருங்கல்பாளையம் குயிலன்தோப்பு, கிருஷ்ணம்பாளையம், கனிராவுத்தர்குளம் ஆகிய பகுதிகளில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் எத்தனையோ பிரச்சினை இருக்கும்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு செய்வது தேவையானதா? திருவண்ணாமலையில் ஏ.டி.எம். கொள்ளை, வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கழித்த பிரச்சினை, கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் கொலை, கோவை, தென்காசியில் கொலை என சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளது. 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது. ஆனால் தற்போது மக்களுக்கு பாதுகாப்பும் இல்லை. நிம்மதியும் இல்லை.
இந்த முறையும் ஒரு செங்கலை தூக்கி கொண்டு வந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். அவருக்கு பால்டாயில் புகைப்படத்தை காட்டி விரட்டி அடியுங்கள்.
மதுரையில் கட்டப்படும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கும், ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றால்தான் இந்த அரசை திருத்த முடியும் என கூறினார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.