சிவில் பிரச்சனைகளில் போலீசார் தேவையின்றி தலையிடக் கூடாது என்று காவல்துறைக்கு ஏடிஜிபி அருண் அதிரடியாக உத்தரவு போட்டுள்ளார்.
நிலம், வீடு மற்றும் பணப் பிரச்சனைகளில் போலீஸார் தேவையில்லாமல் தலையிடக் கூடாது என்று நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், சில பிரச்சனைகளில் காவல்துறையினர் தலையிட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்ற சூழலில், மக்கள் போலீசாரின் உதவியை நாடுகின்றனர். அப்போது, சட்ட விதிகளை போலீசார் மீறுவதாக புகார்கள் எழுகின்றன.
இந்த நிலையில், சிவில் பிரச்சினைகளில் தேவையில்லாமல் போலீசார் தலையிடக் கூடாது என்று போலீசாருக்கு ஏடிஜிபி அருண் அதிரடி உத்தரவை போட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியதாவது:- பணத்தகராறு, சொத்து தகராறு, வழித்தட தகராறு போன்ற சிவில் விவகாரங்களில் போலீசார் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். தலையிட வேண்டிய சூழல் வந்தால் மாவட்ட எஸ்.பி அல்லது காவல் ஆணையர்களிடம் அனுமதி பெற வேண்டும். மீறினால் சட்ட விரோதமாக கருதப்படும், ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும், என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.