நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளிலும், மக்கள் சேவைகளிலும் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக, கட்சிகளின் செயல்பாடுகளை முன்னிறுத்தி சமூகவலைதளங்களில் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக, அதிமுக, திமுக மற்றும் பாஜகவினர் X தளத்தில் படு சூட்டிப்பாக செயல்பட்டு வருகின்றனர். மேலும், ஒரு நபரையோ அல்லது செயலுக்கோ ஆதரவாகவோ, எதிராகவோ ஹேஷ்டேக்குகளை டிரெண்ட் செய்வது வாடிக்கையாகி விட்டது.
அந்த வகையில், திமுகவினரை விமர்சித்தும், கிண்டலடிக்கும் விதமாகவும், #கண்டாவரச்சொல்லுங்க ஹேஷ்டேக்குகளை அதிமுகவினர் டிரெண்டாக்கி வருகின்றனர்.
AIADMK IT WING தனது பக்கத்தில், “மக்கள் பணி செய்ய வாய்ப்பளித்த மக்களை மறந்து 5 வருடங்களாக தலைமறைவாக இருக்கும் திமுகவோட 38 MP யகண்டாவரச்சொல்லுங்க,” எனப் பதிவிட்டுள்ளது.
அதிமுக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் தனது X தளப்பதிவில், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சந்திசிரிக்க வைத்துவிட்டு ஸ்பெயினில் இன்ப சுற்றுலா மேற்கொண்டுள்ள விடியா அரசின் முதல்வரைக் #கண்டாவரச்சொல்லுங்க ,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக ஆதரவாளர் ஒருவர், “4000 கோடி மழை நீர் வடிகால் திட்டம் என நாமும் போட்டவரை #கண்டாவரச்சொல்லுங்க,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக ஆதரவு X தளப்பக்கம் ஒன்று, “நீட் தேர்வை உறுதியாக ரத்து செய்வோம் என்று சொன்னவங்கள #கண்டாவரச்சொல்லுங்க !!,” எனக் குறிப்பிட்டுள்ளது.
இதேபோல, திமுகவினரும் அதிமுகவினருக்கு எதிராக #கண்டாவரச்சொல்லுங்க ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…
This website uses cookies.